News Update :
Home » » கனிமொழியுடன் கருணாநிதி பிரதமரை சந்தித்தார் கேரளாவை வலியுறுத்துங்கள் என்றும் கோரினார்

கனிமொழியுடன் கருணாநிதி பிரதமரை சந்தித்தார் கேரளாவை வலியுறுத்துங்கள் என்றும் கோரினார்

Penulis : karthik on Sunday 25 December 2011 | 20:55

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று சந்தித்து பேசினார். கருணாநிதியுடன் அவரது மகளும் எம்.பி.,யுமான கனிமொழியும் சென்று பிரதமரை சந்தித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடக்கும் கணித மேதை ராமானுஜர் 125-வது பிறந்த தின விழாவில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கரைக்குடி புறப்பட்டு செல்கிறார். அங்கு நடக்கும் பல்கலை., விழா மற்றும் தனியார் மருத்துவமனை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நேற்று மாலையில் வந்த பிரதமரை ,தமிழக முதல்வர் ஜெ., சந்தித்து பேசினார். இவர் தமிழக பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.

இன்று காலையில் கவர்னர் மாளிகைக்கு சென்ற கருணாநிதி பிரதமரிடம் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பேசினார். இந்த பேச்சின்போது கருணாநிதி வலியுறுத்திய விஷயங்கள் வருமாறு: முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும், இது தொடர்பான கோர்ட் உத்தரவை கேரள அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பிரச்னையில் கேரள அரசு இணங்கி செல்ல அந்த அரசிடம் , பிரதமர் வலியுறுத்தி கூற வேண்டும் என்றும் கோரினார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்தும் பேசினார். கருணாநிதியுடன் கனிமொழி மற்றும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்றனர். 2 ஜி வழக்கில் ஜாமினில் இருக்கும் கிறிஸ்துமஸ் விழா கோர்ட் விடுமுறை என்பதால் கனி‌‌மொழி தற்போது சென்னையில் இருக்கிறார்.


கறுப்பு கொடி காட்ட முயற்சி: விஜயகாந்த் கைது : இதற்கிடையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என தே.மு.தி.க., அறிவித்திருந்தது. இதனையொட்டி டி.நகரில் இருந்து கறுப்புக்கொடியுடன் தனது கட்சி தொண்டர்களுடன் புறப்பட்ட போது விஜயகாந்த் , போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவருடன் 4 எம்.எல்.ஏ.,க்களும் கைதாகினர்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger