News Update :
Home » » விஜயகாந்தின் நன்றி கெட்டதனம்

விஜயகாந்தின் நன்றி கெட்டதனம்

Penulis : karthik on Friday 30 December 2011 | 16:35

 
 
ஏத்தி விட்ட ஏணியை யாராக இருந்தாலும் மறக்கக்கூடாதுங்க! அட நம்ம வள்ளுவர் கூட அதான சொல்லி இருக்கிறார். இப்ப கோடம்பாக்கம் ஹாட் டாபிக்கும் நன்றி மறந்த கதை பற்றியது தான்.
 
ஓட்டுக் கேட்க மட்டும் தான் பல அரசியல்வாதிகள் வர்றாங்க. அப்புறம் உங்களை மறந்து விடுகிறார்கள். நாங்கள் அப்படி இல்லை மக்களே! என மேடைகளில் மைக் பிடித்து உரக்க பேசும் விஜயகாந்த், "தான் சினிமாவில் கோலோச்ச காரணமாக இருந்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனை இப்படி மறக்கலாமா?". அன்று இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் அருமையான படங்களை விஜயகாந்த்துக்கு கொடுத்திருக்காவிட்டால் அவருக்கு சினிமாவில் அங்கீகாரம் கிடைத்திருக்காது, அதை வைத்துக் கொண்டு அவர் அரசியலும் செய்திருக்க முடியாது என கூறி வரும் கோலிவுட் வட்டாரம் சற்று கொதித்துப் போயிருக்கிறதாம்.
 
கொதிப்புக்கு காரணம் இது தான். இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் அண்மையில் சாலை விபத்தில் மரணமடைந்தார். இந்த துக்க செய்தி தெரிந்து போனில் கூட ஒரு வார்த்தை ஆறுதல் கூறவில்லையாம் விஜயகாந்த். மகனைப் பறிகொடுத்த சுந்தர்ராஜனுக்கு, விஜயகாந்தின் இந்த பாராமுகம் மேலும் துன்பத்தை அளித்துள்ளதாம். சுந்தர்ராஜன் தன் கோடம்பாக்க சகாக்களிடம் புலம்பியது, தற்போது காற்றில் பரவிக் கொண்டிருக்கிறது. இது விஜயகாந்த் காதுகளுக்கும் எட்டுமா மக்களே?!

 


Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger