News Update :
Home » » பத்திரிக்கையாளர்களிடம் நடுவிரலைக் காட்டிய சோனம் கபூர்!

பத்திரிக்கையாளர்களிடம் நடுவிரலைக் காட்டிய சோனம் கபூர்!

Penulis : karthik on Thursday 29 December 2011 | 08:18

 
 
 
 
 
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அனைவரையும் அதிர வைத்தார் இந்தி நடிகை சோனம் கபூர்.
 
அனில் கபூரின் மகள் சோனம் கபூர். இந்தியில் நாயகியாக வலம் வரும் சோனம், வெளி்பபடையாக பேசக் கூடியவர். தைரியமாக பேசக் கூடியவர்.ஆனால் தற்போது அவர் நடுவிரலைக் காட்டி அனைவரையும் அதிர வைத்துள்ளார். இது சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. ஆனாலும் சோனம் இப்படியெல்லாம் செய்திருக்கக் கூடாது என்று பாலிவுட்டில் பேச ஆரம்பித்துள்ளனர்.
 
பிளேயர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் சோனம் கபூர். இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த சோனம் கபூர், பிரஸ் மீட் முடிந்து கிளம்பியபோது தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அனைவரையும் அதிர வைத்தார்.
 
நடுவிரலைக் காட்டியது குறித்து சோனத்திடம் கேட்டபோது, நடுவிரலைக் காட்டுவது என்பதில் எந்த விசேஷமும் இல்லை. இன்றைய இளைஞர்களின் மொழியாக அது உள்ளது. திரைப்படங்களுக்கு சென்சார் செய்வது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது எனக்குப் பிடிக்கவில்லை. அதைத்தான் நான் நடுவிரலைக் காட்டி வெளிப்படுத்தினேன். வேறு எந்தக் காரணமும் இதற்கு இல்லை.
 
இளைஞர்கள் இப்போது நடுவிரலை ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்வது சாதாரண விஷயம். ஒருவரது பேச்சு அல்லது செயல் பிடிக்காவிட்டால் நடுவிரலைக் கொள்வது சகஜமானதுதான்., இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பிரச்சினையாக்கக் கூடாது. அதுவும் கலை, திரைப்படங்களில் ஈடுபட்டிருப்போருக்கு இதெல்லாம் சாதாரணம். மேலும் இந்தியா பேச்சு, கருத்து சுதந்திரத்திற்குப் பெயர் போனது. அப்படிப்பட்ட நாட்டில் நான் நடுவிரலைக் காட்டியதை பெரிதாகப் பேசுவது வியப்பாக உள்ளது என்றார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger