News Update :
Home » » ஆந்திராவில் தோப்புக்கரணம் தண்டனைக்கு மாணவன் பலி

ஆந்திராவில் தோப்புக்கரணம் தண்டனைக்கு மாணவன் பலி

Penulis : karthik on Friday 14 September 2012 | 01:28

ஆந்திராவில் தோப்புக்கரணம் தண்டனைக்கு மாணவன் பலி: பள்ளிக்கூடம் சூறை ஆந்திராவில் தோப்புக்கரணம் தண்டனைக்கு மாணவன் பலி: பள்ளிக்கூடம் சூறை
ஆந்திராவில் தோப்புக்கரணம் தண்டனைக்கு மாணவன் பலி: பள்ளிக்கூடம் சூறை

நகரி, செப். 14- ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் ராயல் எம்பஸ்வி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முகம்மது சித்திக் ஹ§சைன் என்பவரின் மகன் முகம்மது இஸ்மாயில், 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் ஏற்கனவே ஒரு விபத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டவன். இவனது மூட்டில் அறுவை சிகிச்சை செய்து பிளேட் பொருத்தப்பட்டு இருந்தது. கடந்த 4-ந்தேதி வகுப் பறையில் இஸ்டாயில் குறும் புத்தனம் செய்துள்ளான். வகுப்பு ஆசிரியையான மதினாபேகம் அவனுக்கு 100 முறை தோப்புக்கர்ணம் போடுமாறு தண்டனை அளித்துள்ளார். 40 தோப்புக்கரணம் போட்ட நிலையில் அவன் வகுப்பிலேயே மயங்கி விழுந்தான. இதையடுத்து அவன் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவன் நேற்று இறந்தான். தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை கொடுத்ததால், கால் மூட்டில் பொருத்தப்பட்டிருந்த பிளேட் உடைந்து, செப்டிக் ஆனதால், மாணவன் இஸ்மாயில் இறந்ததாக அவனது பெற்றோர் குற்றம்சாட்டினார். பின்னர் பெற்றோரும், உறவினர்களும் திரண்டு சென்று பள்ளிக்கூடத்தை சூறையாடினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சதானாம் செய்து அனுப்பி வைத்தனர்.  இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் அகுன்அகர்வால் கூறியதாவது:- மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வகுப்பு ஆசிரியை மதினாபேகம் மீது 304-ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவனின் மரணத்துக் கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தெரியவரும். உடல் ரீதியிலான தண்டனை காரணமாக மாணவன் இறந்ததாக தெரியவந்தால், ஆசிரியை கைது செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல குண்டூர் மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 மாணவர்கள் தலைமை ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மாணவர்கள் 2 பேர் சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்தனர். அவர்களை தனது அறைக்கு அழைத்த தலைமை ஆசிரியர், மின்சார ஒயரால் அவர்களை அடித்துள்ளார். இதில் உடலில் காயம் ஏற்பட்ட அந்த மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். 
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger