News Update :
Home » » ஐ.பி.எல் : அரை இறுதி வாய்ப்பு யாருக்கு ஒரு அலசல்

ஐ.பி.எல் : அரை இறுதி வாய்ப்பு யாருக்கு ஒரு அலசல்

Penulis : karthik on Monday 7 May 2012 | 08:39




இதுவரை நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் 4 முறையும் அரை இறுதிக்கு தகுதி பெற்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகு ம். 2 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது நடைபெற்று வரும் 5-வது ஐ.பி.எல். போட்டியில் அரை இறுதியில் நுழைய தடுமாறி வருகிறது.

இந்தப்போட்டியில் விளையாடும் 9 அணிகளும் 16 ஆட்டத்தில் விளையாட வேண்டும். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ஆட்டத்தில் விளையாடி விட்டது. இதில் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 ஆட்டத்தில் தோற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. இதனால் 11 புள்ளிகளுடன் உள்ள து. சென்னை அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன. இதில் 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் உறுதியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

3 போட்டியில் வென்றால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்துதான் தெரியும். நேற்றுடன் 50 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 22 'லீக்' ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. தற்போதுள்ள புள்ளி விவர கணக்குப்படி டெல்லி டேர்டெவில்ஸ் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 10 ஆட்டத்தில் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் 6 ஆட்டங்கள் அந்த அணிக்கு உள்ளது. கொல்கத்தாவை இன்று சந்திக்� �ிறது.

டெக்கான், சென்னை, பஞ்சாப் (2 முறை), பெங்களூர் அணிகளுடன் மோத வேண்டும். இந்த 6 ஆட்டத்தில் ஒன்றில் வென்றாலே அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11 ஆட்டத்தில் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்று 12-வது இடத்தில் உள்ளது. ஒர ு ஆட்டம் முடிவு இல்லை. அந்த அணிக்கு இன்னும் 4 ஆட்டம் உள்ளது. இதில் 2 ஆட்டத்தில் வென்றால் தகுதி பெறும்.

ஒரு ஆட்டத்தில் வென்றாலும் தகுதி பெறுவதில் சிக்கல் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் 11 ஆட்டத்தில் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளன. அந்த அணிக்கு � ��ன்னும் 5 ஆட்டங்கள் உள்ளன. இதில் இரண்டில் வென்றால் தகுதி பெறும். மும்பை அணி கொல்கத்தா, பெங்களூர் அணிகளுடன் தலா 2 முறையும், ராஜஸ்தானுடன் ஒரு முறையும் மோத வேண்டும்.

டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய 3 அணிகளும் அரை இறுதியில் நுழைவதில் சிரமம் இருக்� ��ாது. அந்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளன. அரை இறுதிக்கு தகுதி பெறும் 4-வது அணி எது என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ரா ஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 4 அணிகளுக்குள் போட்டி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் (10-ந்தேதி-ஜெய்ப்பூர்), டெல்லி டேர்டெவில்ஸ் (12-ந்தே தி-சென்னை), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (14-ந்தேதி-கொல்கத்தா), பஞ்சாப் (17-ந்தேதி- தர்மசாலா) ஆகிய அணிகளுடன் மோத உள்ளது.

இந்த 4 ஆட்டத்திலும் வென்றால் தகுதி பெற்றுவிடும். ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் வாய்ப்பு இருக்கும். அதே நேரத்தில் சென்னைக்கு போட்டியாக இருக்கும் மற்ற அணிகள் தோற்க வேண்டும். பெங்களூர் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 5 ஆட்டம் உள்ளது. மும்பை அணியுடன் 2 முறையும், புனே, டெல்லி, டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளுடன் மோத வேண்டி உள்ளது.

தற்போதைய கணக்குப்படி சென்னையைவிட பெங்களூர் நல்ல நிலையிலேயே இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஒரே நிலையில் உள்ளன. இரு அணிகளும் தலா 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் உள்ளன. இரு அணிகளுக்கும் இன்னும் 5 ஆட்டம் எஞ்சியுள்ளன. புனே வாரியர்ஸ் 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. எஞ்சிய 4 ஆட்டத்திலும் வென்றாலும் வாய்ப்பு குறைவே. 4 ஆ ட்டத்திலும் வெற்றி பெறுவது கடினம்.

டெக்கான் சார்ஜர்ஸ் 2 வெற்றி, 8 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இன்னும் 5 ஆட்டம் உள்ளது. 5 போட்டியிலும் வெற்றி பெற்றாலும் எந்த பலனும் இல்லை. இனி நடைபெற இரு� �்கும் போட்டிகளில் எதிர்பாராத முடிவுகள் ஏற்பட்டால்தான் நிலைமை மாறும்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger