News Update :
Home » » லாலு மூளையை இழந்துவிட்டார்: நிதீஷ் குமார்

லாலு மூளையை இழந்துவிட்டார்: நிதீஷ் குமார்

Penulis : karthik on Monday 7 May 2012 | 22:49



டெல்லியில் கடந்த 5ம் தேதி தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பாக நடந்த முதல்வர்கள் மாநாட்டில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், பீகார் முதல்வர் நிதீஷ் குமா ரும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதற்கு ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்தார். நிதீஷின் மதச்சார்பின்மை முகமூடி கிழிந்து விட்டதாகவும் லாலு குற்றம் சாட்டினார். 

இது பற்றி பாட்னாவில் பேசிய நிதிஷ், 'முதல்வர்கள் மாநாட்டின்போது யாராவ� �ு கைகொடுத்தால் அந்த சூழ்நிலையில் எப்படி தவிர்க்க முடியும்? மோடி எனக்கு வாழ்த்து தெரிவித்து கை கொடுத் தார். பதிலுக்கு கைகுலுக்கினேன். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் லாலு பிரசாத் விரக்தி அடைந்துள்ளார். அதனால்தான் இப்படி பேசுகிறார். மூளையை இழந்தவரிடம் இருந்துதான் இது போன்ற கருத்துக்கள் வரும்' என்றார். 

மேலும் பேசிய நிதீஷ், 'ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்ன நிலை எடுப்பது என்பது பற்றி இன்னும் ஆலோசிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் நெருங்கும்போது கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள்' என்றும் கூறினார். 

பீகார் சட்டமேலவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உட்பட 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதீஷ் குமார் நேற்று எம்.எல்.சியாகப் பதவியேற்றுக் கொண்டார்.





Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger