News Update :
Home » » பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சர்கோசி தோல்வி: புதிய அதிபராக ஹோலண்ட் தேர்வு

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சர்கோசி தோல்வி: புதிய அதிபராக ஹோலண்ட் தேர்வு

Penulis : karthik on Monday 7 May 2012 | 04:11




பிரான்சில், அதிபர் தேர்� ��லுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு கடந்த மாதம் 28-ந்தேதி நடந்தது. அதில் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரான்காய்ஸ் ஹோலண்ட் 28.6 சதவீதம் ஓட்டு பெற்றார். ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட நிக்கோலஸ் சர்கோசி 26.2 சதவீதம், அதாவது 2 சதவீதம் வாக்குகள் குறைவாகப் பெற்று பின்தங்கினார். மற்றவர்கள் இவர்களைவிட குறைவான வாக்குகளை பெற்றனர்.   
 
இதையடுத்து 2ம் � ��ட்ட தேர்தல் நேற்று நடந்தது. பிரான்ஸ் நாட்டு சட்டப்படி தேர்தலில் 20 சதவீதத்துக்கும் மேல் பெறுபவர்கள் 2-வது கட்ட தேர்தலில் போட்டியிட முடியும். அதன்படி 2ம் கட்ட தேர்தலில் இவர்கள் இருவர் மட்டுமே களத்தில் இருந்தனர். முதல்கட்ட தேர்தலில் அதிபர் சர்கோசி பின்தங்கியதால், 2ம் கட்ட தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிபெற, அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  
 
ஓட்டு பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிவரை நடந்தது. இதையடுத்து 2 மணி நேரம் கழித்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நிகோலாஸ் சார்கோஸிக்கு 48 சதவீத வாக்குகளும், ஹோலண்டுக்கு 52 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இதனால் சோசலிச கட்சியின் பிரான்காய்ஸ் ஹோலண்ட் வெற்றி பெற்றார்.
 
பிரான்சின் அடுத்த அதிபராக ஹோலண்ட் பதவியேற்க உள்ளார். கடும் போட்டி நிறைந்திருந்த இத்தேர்தலில், சிறிய வித்தியாசத்தில் சார்கோஸி தோல்வி அடைந்திருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய பொருளாதார நெருக்கட� ��, வேலையில்லா பிரச்சினை, ஆப்கானிஸ்தான் போர்முனையில் பிரான்ஸ் ராணுவம் தொடர்ந்து நிலை கொண்டிருப்பது போன்றவை இத்தேர்தலில் எதிரொலித்துள்ளதாகத் தெரிகிறது.
 
சார்கோஸி மீதான வெறுப்புணர்வினாலேயே மக்கள் ஹோலண்டுக்கு வாக்களித்துள்ளதாகவும், ஹோலண்ட் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை, அவருடைய அடுத்த ஐந்து வருட பதவிக்காலத்த� ��ல் நிறைவேற்றுவதென்பது மிக கடினமானது எனவும் சில அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger