News Update :
Home » » புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு எதிராக பொது வேட்பாளர்- தே.மு.தி.க.-கம்யூனிஸ்டு ஆலோசனை

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு எதிராக பொது வேட்பாளர்- தே.மு.தி.க.-கம்யூனிஸ்டு ஆலோசனை

Penulis : karthik on Monday 7 May 2012 | 00:14




புதுக்கோட்டை தொகுதிக்க ு ஜூன் மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
அந்த கட்சி தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த தேர்தலில் அ.தி. மு.க. கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற இந்திய கம் யூனிஸ்டு இந்த முறை போட்டியிடவில்லை. சட்டசபை தேர்தலில் 3 ஆயிரத்து 101 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க.வும் போட்டியிடாது என்று அந்த கட்சி தலைவர் கருணாநிதி அறிவித்து விட்டார்
 
 பா.ம.க., விடுதலை சிறுத்தை கட்சிகளும் போட்டியிடவில்லை. ம.தி. மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தங்கள் நிலைப்பாடு என்ன என்பத� � இதுவரை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 
புதுக்கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட வேண்டும்Ó என்று பெரும்பாலான நிர்வாக� �கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தங்கள் கட்சி வேட்பாளருக்கு மற்ற கட்சிகளின் ஆதரவை கேட்கலாம் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளருக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆதரவு அளித்தது. எனவே புதுக்கோட்டை தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு தே.மு.தி.க. ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
< div style="border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 23px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"> 
தே.மு.தி.க. போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒருவேளை போட்டியிட விரும்பினால் மார்க்சிஸ்டு விட்டுக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. யார் போட்டியிட்டாலும் அது பொது வேட்பாளராகத்தான் இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. தே.மு.தி.க. போட்டியிட்டால் தி.மு.க., பா.ம.க. ஆதரவை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற முடியும்.
 
எனவே மார்க்சிஸ்டு வேட்பாளர் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க.வுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதில ் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுதியாக உள்ளது. எனவே அந்த கட்சி வேட்பாளரே பொது வேட்பாளராக நிற்க அதிக வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. புதுக்கோட்டையில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று இணைந்து புதுக்கோட்டை இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது. அப்படி பொது வேட்பாளரை நிறுத்தினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger