News Update :
Home » » உதயகுமார் மீது கொலை முயற்சி வழக்கு!

உதயகுமார் மீது கொலை முயற்சி வழக்கு!

Penulis : karthik on Sunday 15 April 2012 | 07:03




கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.

இடிந்தகரையை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மனைவி சகாய பெக்லின்ஏஜிடின். இவர் விஜயாபதி பஞ்சாயத்து தலைவி. இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இவர்களது நடவடிக்கையில் கடந்த சில தினங்களாக மாற்றம் ஏற்பட்டதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.< /o:p>

இந்நிலையில் நேற்று முன்தினம் இடிந்தகரை ஊராட்சியில் கூட்டம் நடைபெறுவதாக கூறி கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கினர். அப்போது கவுன்சிலர் ஒருவர் உண்ணாவிரத பந்தலில் இருந்தார். அணு உலைக்கு எதிரான செயலில் நான் ஈடுபட மாட்டேன் என்று தீர்மானத்தில் கையெழுத்திட ம றுத்தார்.

இந்நிலையில் நேற்று சகாயராஜ், அவரது அண்ணன் ஸ்டாலின், மைத்துனர் இன்னாசி ஆகியோர� �� இடிந்தகரைக்கு சென்று அங்கு தண்ணீர் திறக்கும் ஊழியர்களிடம் சாவியை பறித்துக் கொண்டு சென்றனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த இடிந்தகரை மக்கள் சகாயராஜை தேடினர். அப்போது அவர் எதிரே காரில் வந்துக் கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இடிந்தகரை மக்கள் சுமார் 20 பேர் காரை வழிமறித்து அவர்களை தாக்கினர். இதில் சகாயராஜ், அவரது அண்ணன் ஸ்டாலின், இன்னாசி ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து ஸ்டாலின், சகாயராஜ் ஆகியோர் கூடங்குளம் போலீசில் தனிதனியாக புகார் அளித்தனர்.

அதில் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி எங்களை உதயகுமார் தலைமையிலான கும்பல் வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் போரட்டக்குழு ஓருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜன், இனிகோ, மில்டன், வெனிஷ், சங்கீத் உள்பட சிலருக்கு தொடர்பு உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்த உதயகுமார் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தசம்பவம் இடிந்தகரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger