News Update :
Home » » திரிணாமுல் காங்கிரஸ்-காங்கிரஸ்கூட்டணி உடையுமா?

திரிணாமுல் காங்கிரஸ்-காங்கிரஸ்கூட்டணி உடையுமா?

Penulis : karthik on Monday 9 January 2012 | 05:52

மேற்குவங்கத்தில் ஆட்சி செய்துவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ,
மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான கூட்டணியி்ல்
பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
மேற்குவங்காளத்தில் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை நீக்கிவிட்டு , ஆட்சியை
பிடித்தவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பெனர்ஜி.அதற்காக
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து அமோக வெற்றிப் பெற்றார். இந்த நிலையில்
தற்போது 2 கட்சிகள் இடையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட தொடங்கியுள்ளது.
இதன் முன்னோடியாக மத்திய அரசு கொண்டு வந்த லோக்பால் மசோதா , சில்லரை
வர்த்தகத்தில் அன்னிய முதலீடு , பெட்ரோல் விலையேற்றம் உட்பட பலவற்றில்
மமதாவுக்கு மாற்று கருத்து தெரிவித்து வருகிறார்.
மேலும் மேற்குவங்காளத்தில் உள்ள இந்திராபவனின் பெயரை மாற்ற மாநில அரசு
தீர்மானித்துள்ளதால் , காங்கிரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் மீதான அதிருப்தியை தெரிவிக்கும் வகையி்ல் ,
இன்று திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி தரப்பில் கண்டன பேரணி நடத்தி
உள்ளனர். இதற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்
சிலர் கலந்து கொள்ள உள்ள மமதா அனுப்பி வைத்துள்ளார்.
முன்னதாக மமதா பெனர்ஜி பேட்டி ஒன்றில் கூறியதாவது ,
இடதுசாரிகளுடன் இணைந்து செயலாற்ற விரும்பினால் காங்கிரஸ் பிரிந்து
செல்லலாம். நாங்கள் தனியாக கூட செயல்படுவோம் , என்றார்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட மம்தா பானர்ஜி
விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகவே காங்கிரஸை கழற்றிவிடும்
திட்டத்துடன் மத்திய அரசை எதிர்த்து வருகிறார் என்கிறார்கள்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger