News Update :
Home » » ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் ஸ்டிரைக்

ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் ஸ்டிரைக்

Penulis : karthik on Thursday 22 December 2011 | 23:11

ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் துவங்கியிருக்கும் காலவரையற்ற போராட்டத்தினால் 10 நோயாளிகள் முறையான சிகிச்சை இல்லாமல் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த 2 நாட்களாக பணிக்கு வராமல் அரசு நிறுவனத்தை ஸ்தம்பிக்க வைத்த குற்றத்திற்காக 200 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாநிலத்தில் உள்ள டாக்டர்கள் பல ஆண்டு காலமாக பதவி <உயர்வுக்காக காத்திருப்பதாகவும், சம்பள விகிதாச்சாரம் போதாது என்றும் <உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மாநிலும் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரியை நம்பி வரும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர்.

குறிப்பாக விபத்துக்களில் சிக்கி வருவோரும் ஏற்கனவே அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கும் உரிய சிகிச்சை கிடைக்கவில்லை.

நாங்கள் அஞ்சமாட்டோம் : டாக்டர்கள் : இம்மாநிலத்தில் சுமார் 10ஆயிரம் டாக்டர்கள் இந்த போரட்டத்தில் இறங்கியிருப்பதால் பல மருத்துவமனைகள் செயல்படாத நிலையில் இருக்கிறது. இருப்பினும் நிலைமையை சமாளிக்க அரசு ஓய்வு பெற்ற டாக்டர்களை பணியில் அமர்த்தி சமாளித்து வருகிறது. இதற்கிடையில் அடிப்படை நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் நோக்கில் செயல்படும் வழக்கில் ரெஸ்மா சட்டத்தின் மூலம் 200 டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ள்ளனர். பலரை அரசு சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

சிலர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். கடுமையான சட்டத்தை காட்டி மிரட்டினால் நாங்கள் அஞ்சமாட்டோம், இது பிரச்னைக்கு தீர்வாகாது என்று டாக்டர்கள் சங்கத்தினர் அரசை எச்சரித்திருக்கின்றனர். இந்த மாநிலத்தை பொறுத்த வரையில் இது போன்று கடந்த 2010 செப் மாதம் டாக்டர்கள் நடத்திய போராட்டத்தினால் 10 க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்தனர் இந்நிலையில் இந்த ஆண்டும் இந்த ஸ்டிரைக் துவங்கியிருக்கிறது. நோயாளிகள் நிலை அதோ கதிதான் .,
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger