News Update :
Home » » சிகிச்சைக்குப் பின் சூப்பர்ஸ்டார் ரஜினி ; அதிகாரப்பூர்வ படம்

சிகிச்சைக்குப் பின் சூப்பர்ஸ்டார் ரஜினி ; அதிகாரப்பூர்வ படம்

Penulis : karthik on Saturday 8 October 2011 | 06:31

 
 
சிங்கப்பூரில் இருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமானநிலையத்தில் தூரத்தில் இருந்தபடியே கையசைத்து சென்றார். அதன்பிறகு அவரது புகைப்படம் வெளியாகவில்லை.
 
ராணா படத்தில் அவர் விரைவில் நடிக்கவிருக்கிறார். ஷாருக்கானின் ரா-1 திரைப்படத்தின் ஒரு காட்சியில் நடித்துள்ளார் என்றெல்லாம் பேசப்பட்டாலும், ரஜினியின் புதிய தோற்றம் வெளியாகவில்லை; இந்நிலையில் சிகிச்சைக்கு பின் உள்ள ரஜினியின் புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
 
ரஜினி சிகிச்சைக்கு பின் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். ராணா படப்பிடிப்பில் ஏப்ரல் 29-ந்தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். பின்னர் உயர்தர மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சொன்றார். அங்குள்ள மவுண்ட் எலிச பெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
 
பூரண குணமடைந்தபின் கடந்த ஜுலை 13-ந்தேதி சென்னை திரும்பினார். இதையடுத்து மீண்டும் ராணா பட வேலைகள் துவங்கின. ரஜினி மீண்டும் ராணா படத்தில் நடிப்பார் என்று அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் அறிவித்தார். வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகமான செய்திகள் கடந்த சில நாட்களாக உலா வரத்துவங்கின.
 
ரஜினி முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லை என்றும் ராணா படத்தை நிறுத்தப்போவதாகவும் தகவல்கள் வெளியாயின. ராணா வரலாற்று படம் என்பதால் கத்தி சண்டை போடுவது, குதிரையேற்றம் போன்ற காட்சிகளில் ரஜினியால் நடிக்க இயலாது என்றும் கூறப்பட்டது. அண்ணாமலை, படையப்பா மாதிரியான கதையை தயார் செய்யும்படி ரஜினி அறிவுறுத்தி இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இதனை மறுத்தார்.
 
`ராணா' படம் நிறுத்தப்படவில்லை என்றும் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அவர் கூறினார். ரஜினி வீட்டில் ஓய்வு எடுத்த பிறகு அவரது பூர்வீக படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே அவர் எப்படி இருக்கிறார் என்று அறிய முடியாமல் இது போன்ற சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
 
தற்போது முதல் தடவையாக பூரண குணம் அடைந்த ரஜினியின் அதிகாரபூர்வ படம் வெளியிடப்பட்டு உள்ளது.
 
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவின் மகள் லட்சுமி இந்த படத்தை வெளியிட்டு உள்ளார். சமிபத்தில் அவர் சென்னை வந்து ரஜினியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
 
அப்போது அவருடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார். அந்த படத்தை ரஜினி ரசிகர்களுக்கு தசரா பரிசாக அளிப்பதாக கூறி வெளியிட்டு உள்ளார். லட்சுமி கூறும்போது, ரஜினி அங்கிள் மிக நலமாக இருக்கிறார் என்றார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger