News Update :
Home » » பிரகாஷ்ராஜ் படத்தில் கவுரவ வேடத்தில் டோனி, பிரபுதேவா

பிரகாஷ்ராஜ் படத்தில் கவுரவ வேடத்தில் டோனி, பிரபுதேவா

Penulis : karthik on Tuesday 18 October 2011 | 04:47

 
 
 
பிரகாஷ்ராஜ், "டோனி" என்ற பெயரில் புதுப்படம் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் தயாராகிறது.
 
படம் பற்றி பிரகாஷ்ராஜ் கூறியதாவது:-
 
குழந்தைகள் மனநிலையைமையப்படுத்தி டோனி படம் தயாராகிறது. தேர்வுக்காக குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்கின்றனர். பெற்றோரும் அவர்களை அதிக மதிப்பெண் பெற நிர்ப்பந்திக்கின்றனர். குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டுவரும் கல்விமுறை நம்மிடம் இல்லை. குழந்தைகளை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது. சமூகத்துக்கு இப்படம் சில கருத்துக்களை சொல்லும். ஆகாஷ், ராதிகாஆப்தே, தலைவாசல் விஜய், நாசர், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கின்றனர்.
 
கே.பி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். பிரபுதேவா எனக்கு நெருங்கிய நண்பர். அவர் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். ஒரு பாடல் காட்சியில் வருகிறார். இந்த வருடம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
கிரிக்கெட் வீரர் டோனியும், இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றப் போவதாக கூறப்படுகிறது. அதுபற்றிய தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger