News Update :
Home » » அனுஷ்காவை ஓரங்கட்டி 'உம்மா' கொடுத்து சிக்கிய ஷாஹித்!

அனுஷ்காவை ஓரங்கட்டி 'உம்மா' கொடுத்து சிக்கிய ஷாஹித்!

Penulis : karthik on Friday 14 October 2011 | 07:18

 
பார்ட்டி ஒன்றில் இந்தி நடிகர் ஷாஹித் கபூர், நடிகை அனுஷ்கா ஷர்மாவை ஓரங்கட்டி 'உம்மா' கொடுக்கும்போது கையும், களவுமாகப் பிடிபட்டுள்ளார்.
 
பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும், பிரியங்கா சோப்ராவும் அவ்வப்போது சேர்வதும், பிரிவதுமாக உள்ளனர். தற்போது அவர்கள் நிரந்தரமாக பிரிந்துள்ளனர். அதற்கு காரணம் ஷாருக் கான் என்று கூறப்படுகிறது. பிரியங்காவும் ஷாஹித்தை பிரிந்த பிறகு ஷாருக்குடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதனால் ஷாருக் மனைவி கௌரி கடுப்பாகியுள்ளார் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.
 
இந்த நிலையில், ஷாஹித் கபூரும் இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதை உறுதிபடுத்த முடியவில்லை. இந்நிலையில் இம்ரான் கான் நடிதத் மேரி பிரதர் கி துலஹன் பட வெற்றியைக் கொண்டாட பார்ட்டி கொடுக்கப்பட்டது.
 
பார்ட்டிக்கு வந்த ஷாஹித் அங்கு அத்தனை பேர் இருப்பதை மறந்துவிட்டு அனுஷ்காவை ஓரங்கட்டி அவருக்கு இச், இச் என்று முத்தம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் யப்பா, மீடியாக்காரங்க இருக்காங்க, அப்புறம் முத்தம் கொடுக்கலாம்னு சொல்லி இருவரது 'உதடு'களையும் கஷ்டப்பட்டு பிரித்து வைத்துள்ளார்.
 
இருந்தாலும் பிரியாமல், ஒட்டி உறவாடியபடி, பார்ட்டி முழுவதும் ஷாஹித்தும், அனுஷ்காவும் ஒட்டிக் கொண்டே திரிந்துள்ளனர். கரீனா கபூரை காதலிக்கும்போது ஷாஹித் அவருக்கு லிப் டூ லிப் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அனுஷ்காவும், ஷாஹிதும் சேர்ந்து பத்மாஷ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் வேறு 'கம்பெனி'க்கு மாறிவிட்டது உறுதியாகி விட்டது இந்த 'இச் இச்' மூலம்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger