News Update :
Home » » ஆந்திர விபசார அழகி கொலை

ஆந்திர விபசார அழகி கொலை

Penulis : karthik on Wednesday 11 January 2012 | 04:15

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி நகரை சேர்ந்தவர் புவனாரெட்டி (வயது 25). இவர்
சென்னை முகப்பேர் கிழக்கு, கலெக்டர் நகரில், ஒரு அடுக்குமாடி
குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் புவனாரெட்டி கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த போலீஸ்
இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் பிரேமானந்த்சின்கா ஆகியோரின் உத்தரவின்
பேரில் உதவி கமிஷனர் கலி தீர்த்தான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்
சுரேந்திரன் மற்றும் போலீசார் கொலை சம்பந்தமாக தீவிர விசாரனை
நடத்தினார்கள்.
கொலையுண்ட புவனாரெட்டியின் தோழி சபிதாபானுவிடம் போலீசார் துருவி துருவி
விசாரித்தனர். அவர் கூறிய தகவலின்படி, புவனாவை 3 வருடமாக கீழ்ப்பாக்கம்
நேரு பார்க் ஹவுசிங் போர்டில் வசிக்கும் சுரேஷ் (29) என்பவர் காதலித்து
வந்தது தெரியவந்தது.
எனவே இந்த கொலையை காதலன் சுரேஷ் செய்திருக்க கூடும் என அவர் மீது
சந்தேகப்பட்ட போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். அவரின் செல்போன்
நெம்பர் முகவரியை கண்டுபிடித்து, அதன் அடிப்படையில் தேடிய போலீசார்
நேற்று இரவு வாலிபர் சுரேசை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போது போலீசாரிடம் அவர்
வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். புரசைவாக்கத்தில் உள்ள ஒரு
கம்பெனியில் அலுமினிய டிசைனராக வேலை செய்து வந்தேன். அப்போது
புவனாரெட்டியுடன் அறிமுகம் ஆனேன். பின்னர் அடிக்கடி சந்தித்து பேசினேன்.
புவனா பணத்திற்காக வீட்டிலே விபசாரம் செய்து வந்தார். அந்த வகையில்
நானும் அவரின் அழகில் மயங்கி பணம் கொடுத்து அவருடன் உல்லாசமாக இருந்தேன்.
அடிக்கடி சென்று வந்ததால் நான் அவரின் முக்கிய வாடிக்கையாளராகி விட்டேன்.
பின்னர் புவனா பிடித்து போகவே அவரை 3 வருடமாக காதலித்து வந்தேன்.
கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதி முதல் ஜனவரி 4-ந் தேதி வரை இருவரும்
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள புவனாரெட்டியின் வீட்டில்
இருந்தோம். அவரின் தந்தை பெயர் பாஸ்கரரெட்டி. 3 தம்பிகள்
உண்டு.அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி, என்னையே திருமணம் செய்யப்
போவதாக புவனாரெட்டி அவர்களிடம் கூறினார். மீண்டும் சென்னை திரும்பினோம்.
கடந்த வெள்ளிக்கிழமை புவனா எனக்கு போன் செய்து என்னை வீட்டிற்கு வர
சொன்னார். நான் போகவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு புவனாவை தேடி சென்றேன்.
அப்போது அவர் என்னிடம் ஏன் கூப்பிட்ட போது வரவில்லை என்று தகராறு
செய்தார்.
மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி நச்சரித்தார்.
`நான் ஏற்கனவே திருமணம் ஆனவன். அவர்களுக்கு என்ன சொல்வது? என்ற
நினைப்பால் புவனாவின் வற்புறுத்தல் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் சமையல் கட்டில் இருந்த கத்தியை எடுத்து புவனாரெட்டியின் கழுத்தில்
குத்தினேன். அதில் அவர் இறந்ததை அறிந்து கத்தியை அங்கேயே போட்டுவிட்டு
அன்று இரவே தப்பிவிட்டேன்.
இவ்வாறு சுரேஷ் கூறினார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger