News Update :
Home » » 3-ம் தேதி உலகெங்கும் 'கொலவெறி'புகழ் '3'

3-ம் தேதி உலகெங்கும் 'கொலவெறி'புகழ் '3'

Penulis : karthik on Wednesday 11 January 2012 | 18:19

2011 மற்றும் 2012 ன் அதிரடி ஹிட் பாடலான ' ஒய் திஸ் கொலவெறிடி... '
இடம்பெற்ற தனுஷின் '3' படம் வரும் பிப்ரவர் 3- ம் தேதி உலகமெங்கும்
வெளியாகிறது.
பாமரன் தொடங்கி பிரதமர் வரை பாராட்டிய பாடல் இந்த கொலவெறி. அதே நேரம்
விமர்சனங்களுக்கும் குறைவில்லை.
இந்த நிலையில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள '3' படம் வரும் பிப்ரவரி 3- ம்
தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா
இயக்க , தனுஷ் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு பெரும்
எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளதால் , அதிக திரையரங்குகளில் வெளியிடத்
திட்டமிட்டுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த நிறுவனம் பெரும் விலைக்கு இந்தப் படத்தின் வெளியீட்டு
உரிமையை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
படத்தில் பிரபு , ரேஹினி , மயக்கம் என்ன படத்தில் நடித்த சுந்தர் மற்றும்
சிவ கார்த்திகேயன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத்
இசையமைத்துள்ளார்.
' கொலைவெறி ' ஹிட்டுக்காக பார்ட்டி
இதற்கிடையே , கொலைவெறிப் பாடல் சூப்பர் ஹிட்டான சந்தோஷத்தை நண்பர்கள்
மற்றும் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர் தனுஷும் அவர் மனைவியும்
இயக்குநருமான ஐஸ்வர்யாவும்.
செவ்வாய்க்கிழமை மாலை ஜிஆர்டி ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில்
படத்தின் முக்கிய கலைஞர்களும் பங்கேற்றனர். கொலைவெறிப் பாடலுக்கு கிடைத்த
வெற்றி , படத்துக்கும் கிடைக்க வேண்டுமேஎன்ற பதட்டம் தனக்கு இருப்பதாக
ஐஸ்வர்யா தெரிவித்தார்.
இதுநாள்வரை மீசை , தாடியுடன் தோற்றமளித்த தனுஷ் இப்போது , மழுமழு
முகத்துடன் ' துள்ளுவதோ இளமை ' ஸ்டைலில் வந்திருந்தார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger