News Update :
Home » » நண்பர்களின் ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை கட்டிப்போட்டு கற்பழிக்கச்செய்த கணவனும் நண்பர்களும் கைது

நண்பர்களின் ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை கட்டிப்போட்டு கற்பழிக்கச்செய்த கணவனும் நண்பர்களும் கைது

Penulis : karthik on Tuesday 24 January 2012 | 09:08

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வி.வி.ஆர். நகரை சேர்ந்தவர்முருகன்,
மீன் வியாபாரி. இவரது மனைவி வேளாங்கன்னி (வயது27). இருவரும் சில
ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரண்டு
குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இப்பகுதியில் நடந்த திருவிழாவின்போது
முருகன் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டிலிருந்த மனைவி வேளாங்கன்னியை நண்பர்களிடம் ஆசைக்கு
இணங்கும்படி மனைவியை கட்டாயப்படுத்தினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த வேளாங்கன்னியின் வாயில் துணியை திணித்தும்
கைகள் இரண்டையும் பின்புறம் கட்டிவிட்டும் நண்பர்களை கற்பழிக்க செய்து
உள்ளார். போதையில் இருந்த முருகனின் நண்பர்கள் மாரிச்செல்வம் (22),
செல்வக்குமார் (21) ஆகியோர் வேளாங்கன்னியை கற்பழித்தனர்.
இதில் வீட்டில் மயக்கமடைந்த நிலையில் கிடந்த வேளாங்கன்னியை அக்கம்
பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் (பொறுப்பு)
வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மாரிச்செல்வம், செல்வகுமாரை கைது
செய்தனர். கணவர் முருகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger