News Update :
Home » » ஜெயா மாளிகையில் சசிகலா- நடராஜன் நடாத்திய ஈழ ஆதரவு நாடகம்!

ஜெயா மாளிகையில் சசிகலா- நடராஜன் நடாத்திய ஈழ ஆதரவு நாடகம்!

Penulis : karthik on Tuesday 24 January 2012 | 02:43


போயஸ் கார்டனுள் புதைந்திருக்கும் ரகசியங்களும்,துலங்கும் மர்மங்களும்!
தமிழக மக்களின் தார்மீக ஆதரவுக் குரலைத் தமக்குச் சாதகமாக்கி அனுதாபம் தேட முற்படும் அரசியல்வாதிகள் ஒரு புறமும், ஈழ மக்களுக்காக இணையற்ற அரசியல் பணிகளைச் செய்யும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மறு புறமும் என; காலச் சக்கர வேகத்திற்கு இணையாக தமிழகத்து ஈழ ஆதரவும் சுழன்று கொண்டிருக்கிறது.  தமிழக மக்கள் மத்தியில் அண்மையில் பரபரப்பினை ஏற்படுத்திய விடயம் தான் சரித்திரத்தில் சந்தோசத் தோழிகளாக இருந்த சசிகலா அம்மையாரும், ஜெயா அம்மையாரும் பிரிந்தமை ஆகும். 
சசிகலா அவர்கள் போயஸ் கார்டனை விட்டு வெளியேற முன்பதாகவே அவரது நடவடிக்கைகளை ரகசிய கமெராக்களின் உதவியோடு ஜெயா அம்மையார் கண்காணித்து வந்ததாகவும், பிரபல பத்திரிகைப் பிரமுகர் ஒருவர் இவ் விடயங்களில் ஜெயா தரப்பிற்குச் சார்பாக வீடீயோக்களைப் பரிசீலனை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. மேற்படி பரபரப்பு விடயங்கள் ஒரு புறமிருக்க, ஜெயா டீவி ஊழியர்கள் சிலர் காரில் வீடியோ சாதனங்களை போயஸ் கார்டனின் மறைவுப் பகுதியிலிருந்து தமது வாகனங்களுக்குள் கொண்டு செல்லும் போது சசிகலாவிற்கு ஆதரவானோர் சிலர் கண்டதாகவும் ஜெயா - சசிகலா விடயத்தினை மேலும் பூதாகரமாக்கும் நோக்கில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதில் எந்தளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது போயஸ் கார்டன் மதிலுக்குத் தான் வெளிச்சம்!

இவ் விடயங்களுக்கும் அப்பால் அண்மையில் வெளியாகியிருக்கும் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விடயம் தான் சசிகலாவின் கணவருக்கும், ஈழ ஆதரவுக் குழுக்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றிய செய்திகளாகும். சசிகலா ஜெயா நட்பிற்கு போயஸ் கார்டன் எவ்வளவு தூரம் பங்களிப்பினை நல்கியிருக்கிறதோ; அந்தளவு தூரம் தமிழகத்தில் போலி ஈழ ஆதரவாளர்கள் எனும் போர்வையில் செயற்படும் சில ஈழ ஆதரவாளர்களின் செயற்பாடுகளுக்கான பணப் பரிமாற்றத்திற்கும் போயஸ் கார்டனில் உள்ள சிலரும், அங்கிருந்த முக்கிய பிரமுகர்களான நடராஜனும் பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள் எனும் செய்தியினை சிபிஐ வெளியிட்டிருக்கிறது.

ஜெயா அவர்களின் சொத்துக்கள் தொடர்பிலும், வருமான வரிகள், வருமானங்கள், செலவீனங்கள் தொடர்பிலும் நம்பகத் தன்மை கொண்டவராக நடராஜன் இருப்பது போன்று; ஈழ ஆதரவுக் குழுக்கள் சிலவற்றினைப் பணப் பரிமாற்றம் மூலம் தூண்டி விட்டு அனல் பறக்கப் பேச வைப்பதிலும் குறியாக நடராஜன் இருந்திருக்கிறார் என தமிழக கியூ பிராஞ் பிரிவினருக்கு சிபிஐ ஊடாகத் தகவல் கிடைத்திருக்கிறது. சிபிஐ வலையமைப்பிற்கு மேற்படி விடயங்கள் தெரிய வரும் வரை தமிழகத்தில் உள்ள கியூ பிராஞ் மாநில உளவுத் துறைக்கு இவ் விடயங்கள் தொடர்பாக சிறிதளவு செய்திகளும் எட்டவில்லை என்பதனை அறிந்த சிபிஐ தமிழக கியூ பிராஞ்சின் நடவடிக்கை தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
நோர்வேயினைத் தலமையகமாகக் கொண்டியங்கும் விடுதலைப் புலிகளின்  அனைத்துலகத் தொடர்பகத்தினைச் சேர்ந்த நெடியவன் தலமையிலான குழுவினர் தான் தமிழகத்தில் மீண்டும் ஈழ ஆதரவினை வலுப்படுத்தி, மீளவும் பிரபாகரன் அவர்கள் போரினைத் தொடங்குவார்கள் எனும் பொய்ப் பிரச்சாரத்தினை மேற் கொள்ளுவதற்கு அனல் பறக்கும் பேச்சாளர்கள் சிலரை ஒழுங்கு செய்திருந்ததாகவும், இவர்களின் நடவடிக்கைகளுக்கான பணங்கள் யாவும் சிபிஐ மற்றும் கியூ பிராஞ் போலீஸின் கண்களுக்கு தெரியாது, யாருக்கும் சந்தேகம் வரா வண்ணம் மூன்றாந் தரப்பு ஒன்றினூடாக மிக மிக ரகசியமாக நடை பெற்றதாகவும் சிபிஐ தரப்பு தகவல்களை வெளியிட்டிருக்கிறது. 

இந் நிலையில் சிபிஐ வசம் இந்த கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய புள்ளியொருவர் டுபாயில் வைத்து சிக்கியுள்ளார். இதன் மூலம் நடராஜன் உள்ளிட்ட பலரை ஆதாரங்களுடன் அமுக்கும் நடவடிக்கையிலும் சிபிஐ களமிறங்கியிருக்கிறது. போயஸ் கார்டன் தொடர்பில் ஜெயா சசிகலா பிரிவிற்குப் பின்னர் எழுந்திருக்கும் பல்வேறு சர்ச்சைகளிற்கு மத்தியில் ஈழம் தொடர்பான போலி ஆதரவாளர்கள் அல்லது பணத்திற்காக உருவேற்றும் ஆதரவாளர்கள் தொடர்பிலும், அவர்களை வழி நடாத்திய நடராஜன் மற்றும் இதர நபர்களைத் தேடியும் சிபிஐ இப்போது வலை விரித்திருக்கிறது. இந் நிலையில் ஜெயா அம்மையார் தேர்தல் காலத்தில் விசியெறிந்த ஈழ ஆதரவு வாக்குறுதிகளும் மக்கள் மத்தியில் சந்தேகத்தினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை!
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger