News Update :
Home » » குட்டை பாவாடையும் கோவணமும்

குட்டை பாவாடையும் கோவணமும்

Penulis : karthik on Wednesday 23 November 2011 | 07:42


நடிகைகள் சினிமா விழாக்களில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்பது மரபு. இதனால் பிரிண்ட் மீடியாக்களும், வலைப்பதிவுகளும் காலத்தை ஓட்டுகிறது. ஸ்ரேயா சிவாஜி விழாவிற்கு வந்து சென்ற பிறகு மன்னிப்பு கேட்டார். நமிதா கையோடு ஒரு துண்டு எடுத்து வருகிறார். ஆனால் இந்து மக்கள் கட்சி போன்றவை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இந்த மாதிரி தமிழ்நாட்டின் முக்கியமாக பிரச்சனைகளுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பும், குஷ்பு கருத்தும் நமக்கு பழக்கப்பட்டது தான்...

குஷ்பு கருத்து:

நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச்செல்வார். ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன.

இந்து மக்கள் கட்சி கருத்து:

தமிழக கலாசாரம் பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலம், அதனால் தான் கற்புக் கரசியான கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல் இரண்டு நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் அதுபோல் அணியலாம். பொதுவிழாக்களுக்கு அதுபோல் வரக்கூடாது என்கிறோம்.
கிராமத்தில் விவசாய வலி தொழிலாளர்கள் பலர் கோவணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர். அதுபோல் கோவணம் அணிந்து கொண்டு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் அவர்களை குஷ்பு சந்திப்பாரா? அல்லது பேசத்தான் செய்வாரா? அதுபோலத்தான் நடிகைகள் கவர்ச்சி ஆடையில் பொது விழாக்களில் பங்கேற்பதை நாங்கள் பார்க்கிறோம். அதை எதிர்க்கிறோம். அதற்கு நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கி எங்களை எதிர்ப்பதை குஷ்பு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆக மொத்தம் இவர்களை போட்டு எனக்கு நான்கு நிமிட புகழ் வந்துவிட்டது

நல்ல படங்கள் கிடைக்கவில்லை, மன்னிக்கவும் :-)
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger