News Update :
Home » » சீதை வேடம்: கணவனை பிரிந்த மனைவியின் வலியை உணர்ந்தேன்: மனைவியிடமிருந்து கணவனை பிரித்த நயன்தாரா பேட்டி

சீதை வேடம்: கணவனை பிரிந்த மனைவியின் வலியை உணர்ந்தேன்: மனைவியிடமிருந்து கணவனை பிரித்த நயன்தாரா பேட்டி

Penulis : karthik on Wednesday 23 November 2011 | 07:46

 
 
நயன்தாரா, தெலுங்கில் கடைசியாக நடித்த "ஸ்ரீராம ராஜ்ஜியம்" படம் சமீபத்தில் ரிலீசானது. தமிழிலும் இப்படம் "டப்பிங்" செய்து வெளியிடப்படுகிறது. இப்படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடித்துள்ளார். பாலகிருஷ்ணா ராமராக நடித்துள்ளார்.
 
இப்படம் குறித்து நயன்தாரா கூறியதாவது:-
 
"ஸ்ரீராம ராஜ்ஜியம்" படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். எனது பிறந்த நாளான கடந்த 18-ந்தேதி இந்த படத்தை நான் பார்த்தேன். ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த படம் எனது பிறந்தநாள் பரிசாகும். சீதை வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, என்னால் நடிக்க முடியுமா? என்று பயந்தேன். அஞ்சலி தேவி போன்ற நடிகைகள் செய்யவேண்டிய கேரக்டர்.
 
அதில் இயக்குனர் எனது ஸ்டைலில் சுதந்திரமாக நடிக்க வைத்தார். சில நாட்களிலேயே கேரக்டரில் ஒன்றினேன். விரதம் இருந்தேன். சீதையாகவே வாழ்ந்தேன். கணவனை இழந்த மனைவியின் வலியை என்னால் உணர முடிந்தது. படத்தில் முதலாவது ஆசிரமம் சீன்களை படமாக்கினார்கள். நான் முழுமையாக சைவத்துக்கு மாறினேன். தினமும் கோவிலுக்கு சென்றேன். பூஜைகள் செய்தேன். இந்த படத்தில் நடிப்பதற்கு பாலகிருஷ்ணாதான் முக்கிய காரணம்.
 
அவருடன் ஏற்கனவே "சிம்ஹா" என்ற படத்தில் நடித்துள்ளேன். கேரக்டர் சிறப்பாக அமைய அவரும் உதவினார். பாராட்டுக்கள் கிடைக்க காரணமான எல்லோருக்கும் நன்றி.

இப்படி பேசியுள இந்த நயன்தாராவுக்கு ராமலத்திடம் இருந்து பிரபுதேவாவை பிரித்து கொண்டு வரும் போது ராமலத்தோட வலி தெரியல்லையா...! நயன்தாராவுக்கு இதையெல்லாம் பேசுற தகுதி இருக்கா...?
இப்ப கூட ஒன்றும் ஆகல்ல கணவனை பிரிந்த மனைவியின் வலி தெரிந்ததால் பிரபுதேவாவை ராமலத்துடன் சேர்த்து வச்சிட்டு இப்படி தத்துவம் பேசினால் உங்கள் புகழ் எங்கும் ஒலிக்கும்....



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger