News Update :
Powered by Blogger.

ஸ்பெக்ட்ரம் ஏலத்தொகை அதிகரிப்பு: செல்போன் கட்டணம் உயருகிறது

Penulis : karthik on Monday, 23 April 2012 | 22:11

Monday, 23 April 2012




2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கான குறைந்த பட்ச கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) சிபாரிசு செய்து உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருமானம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி மட்டும்தான்.
 
ஆனால், டிராய் அமைப்பின் பரிந்துரை மூலம் 2 ஜி ஸ்பெக்ட்ர ம் ஏலத்தின் மூலம் ஏறத்தாழ 7 மடங்கு அதிகமாக அதாவது ரூ.7 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தற்போது உலகிலேயே இந்தியாவில்தான் செல்போன் கட்டண விகிதங்கள் குறைவாக உள்ளன. டிராய் அமைப்பின் இந்த பரிந்துரை காரணமாக இந்தியாவில் செல்போன் கட்டணங்கள் அதிக அளவில் உயரும்' என்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அச்சம் தெரிவித்து உள்ளன.
 
வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் டிராய் அமைப்பின் சிபாரிசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.














comments | | Read More...

'சன் பிக்சர்ஸ்'க்கு போட்டியாக விரைவில் வருகிறது ஜெயா பிக்சர்ஸ்!




சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியாக இருந்த சன் நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிற� �வனத்தை நிறுவி படங்களை தயாரித்தும், பிறர் தயாரித்த படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கி விநியோகம் செய்தும் வருகிறது.

தமிழ் தொலைகாட்சிகளில் சன் சேனலுக்கு போட்டியாக இருக்கும் ஜெயா தொலைக்காட்சி தனது சேனலில் சில படங்களுக்கு விளம்பரம் செய்தாலும் விநியோகம் செய்வதில் ஈடுபாடு காட்டாமல் இருந்தது.


சில நாட்களுக்கு முன் ஆஸ்கர் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வேலாயுதம் படத்தை ஜெயா சேனல் விநியோகம் செய்யும் எண்ணத்தில் இருப்பதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் பிறகு அது பொய்யாகி ஆஸ்கார் ஃபிலிம்ஸும், ஐங்கரன் இண்டர்நேஷனலும் அந்த படத்தை விநியோகம் செய்தன.

தற்போது ஜெயா தொலைக்காட்சி இனி வரவிருக்கும் படங்களை விநியோகம் செய்வதில் முனைப்புடன் இறங்கப்போவதாகத் தெரிகிறது. ஜெயா தொலைக்காட்சியின் பார்வை வளையத்திற்குள் இருப்பது கமலஹாஸனின் இயக்கத்திலும், தயாரிப்பிலும், நடிப்பிலும் உருவாகிக்கொண்டிருக்கும் படமான விஸ்வரூபம் மற்றும் ரஜினியின் நடிப்பில் உருவாகிகொண்டிருக்கும் கோச்சடையான் ஆகிய படங்கள் தான் என்கின்றனர்.

முக்கிய நடிகர்களின் படங்களையும், பிரபல தயாரிப்பாளர்களின் படங்களையும் தன் வசம் இழுப்பதற்கு ஜெயா தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளதாம்.



comments | | Read More...

பிரபுதேவாவுடன் காதலா? த்ரிஷா பதில்!




நடிகர் பிரபுதேவா கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தன் வீட்டில் நெருங்கிய நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டா� �ினார். மிட்-நைட் பார்ட்டியாக அரம்பித்து காலை வரை நீடித்த அந்த பார்ட்டியில த்ரிஷா, விஷால், ஜெயம் ரவி என பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

 பிரபுதேவா கொடுத்த மிட்-நைட் பார்ட்டி! என்ற தலைப்பில் நக்கீரன் இணையதளத்திலும் அந்த
பார்ட்டியை பற்றிய தகவல் வெளிவந்தது. அதன் பின் பிரபுதே வா 'துன்பம் வரும் வேலையில் சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும். அது ஒரு பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை' என பேசினார்.

பார்ட்டியில் த்ரிஷாவுடன் பிரபுதேவா நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோ ஒன்றை த்ரிஷா தனது ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த போட்டோவினால் பிரபுதேவா த்ரிஷாவுடன் இணைத்து கதை கதையாக பேசினார்கள்.


இதை பற்றி பேசிய த்ரிஷா "தெலுங்கில் எனக்கு பிரேக் தந்தவர் பிரபு தேவா. அவர் இயக்கிய முதல் 2 படங்களிலும் நான்தான் ஹீரோயின். அப்போது முதலே நாங்கள் நல்ல நண்பர்கள். இடையில் எ� �்போது சந்தித்தாலும் சகஜமாக பேசுவோம்.நட்பு காரணமாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். அதனால் அவரது பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றேன்.

அதற்குள் ஏகப்பட்ட வதந்திகளை பரப்புகிறார்கள். நாங்கள் நண்பர்கள் என்பது எங்களுக்கு தெரியும். இது எனக்கு புதிதல்ல. இது பற்றி நான் கவலைப்படவும் இல்லை. இப்போது 'சமரன்' படத்தில் விஷாலுடன் நடிக்கிறேன்.

எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. மற்ற விஷயங்களை பற்றி யோசிக்கக் கூட என்னிடம் நேரம் இல்லை. " என்று கூறினார்.

இப்போது கோடை வெய்யிலை சமாளிக்க ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார் த்ரிஷா.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger