News Update :
Powered by Blogger.

நம்ம மதுரை ஆதீனமா?...ஆச்சரியத்தில் மதுரை மக்கள்!

Penulis : karthik on Sunday, 29 April 2012 | 04:34

Sunday, 29 April 2012




மதுரை மக்கள் பெரும் வியப்பிலும், குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளனர். மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவுதான் இந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.

மதம் சார்ந்த மடங்கள் எத்தனையோ தமிழகத்தில் இருந்தாலும் அதையும் தாண்டி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் குன்றக்குடி அடிகளாரும், அவரது மடமும் மட்டுமே. மதம் சார்ந்த ஒ� ��ு அதிபதியாக இருந்தாலும் கூட தமிழார்வலராக, தமிழ் ஊழியராக, தமிழுக்காகவும், சமுதாயத்திற்காகவும் த ொண்டாற்றிய பெருமை படைத்தவர் குன்றக்குடி அடிகளார்.

தனக்காக, தான் சார்ந்த மதத்திற்காக என்றில்லாமல், தமிழுக்காகவும், தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் குன்றக்குடி அடிகளார். குன்றக்குடி மக்கள் இன்றளவும் அடிகளாரை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மத மாச்சரியமின்றி, அரசியல் பாகுபாடின்றி அ� �்தனை பேராலும் பாராட்டப்பட்டவர், மதிக்கப்பட்டவர் குன்றக்குடி அடிகளார். அவருக்குப் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது என்பதுதான் உண்மை.

குன்றக்குடி அடிகளாரைப் போல இல்லாவிட்டாலும் கூட சமுதாயம் சார்ந்த ஒரு மனிதராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் மதுரை ஆதீனம். ஈழத் தமிழர் போராட்டம், முல்லைப் பெரியாறு � �ணை போராட்டம் என பல போராட்டங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டவர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் முன்பு இயங்கிய டெசோ அமைப்பில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர்.

சமூக பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து அக்கறை காட்டி வந்தவர். அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பில் இருந்து வந்தவர். இவர் மீதும் சலசலப்புகள், சர்ச்சைகள் இருந்தபோதும் கூட ப� �ரிய அளவில் மக்களிடையே களங்கப்படாதவராகவே இருந்து வந்தார்.

ஆனால் மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவு மதுரை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஆதீனமா இப்படி முடிவெடுத்தார் என்பதை மதுரை � ��ுழுக்கப் பேச்சாக உள்ளது.

ஆதீனம் இப்படிச் செய்வார்னு யாருமே எதிர்பார்க்கலைங்க, ரொம்ப ஆச்சரியமா இருக்கு என்கிறார்கள் மதுரைக்காரர்கள். மதுரை ஆதீனம் என்பது மதுரையின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமா� � மாறிப் போன ஒன்று, மதுரையின் அடையாளங்களில் ஒன்று, மதுரையின் வரலாற்றில் ஒன்று. எப்போது தோற்றுவிக்கப்பட்டது என்பது கூட சரியாக தெரியாத அளவுக்கு மிக மிகப் பழையான ஒரு மடம்.

சைவக் குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவித்த மடம் இது. சைவ நெறி பரப்பி வந்த இந்த மடத்தில் இதுவரை இந்த அளவுக்கு பரபரப்பான சம்பவம் எதுவும் நடந்ததில்லை. ஆனால் தற்போது மதுரை ஆதீனம் அகில இந்திய அளவில் ஆச்சரியக் குறியாக எழுந்து � �ிற்கிறது.

மதுரையைச் சேர்ந்த ஆசிரியரான சுப்பிரமணியம் என்பவர் ஆதீனத்தின் முடிவு குறித்துக் கூறுகையில், ஏதோ 'ஏ படம்' பார்த்தது போல இருக்கிறது ஆதீனத்தின் இந்த முடிவு. இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.இது மோசமாக கனவாக இருக்க வேண்டும் என்று இப்போது கூட நான் வேண்டுகிறேன். அன்னை மீனாட்சியை தரிசித்து விட்டு ஆதீனம் மடம் வழியாகத்தான் நான் வீட்டுக்குப் போவேன். இனி� ��ேல் நான் இந்த மடத்தைப் பார்க்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. பார்க்கவும் பிடிக்கவில்லை. ரொமபக் கஷ்டமா இருக்கு சார் என்றார்.

மதுரையைச் சேர்ந்தவரான கதிரேசன் என்ற பேராசிரியர் கூறுகையில், மதுரை ஆதீம் என்பது மாபெரும் தலைவர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட ஒரு மடம். பசும்பொன் முத்துராமலிங்கத் த� ��வர் போன்றோர் அரவணைத்திருந்த மடம் இது. இதன் வரலாறு 1500 ஆண்டுகளுக்கும் மேலானது. இதற்கு மதுரை ஆதீனம் நியமித்துள்ள புதிய ஆதீனத்தை எங்களால் நிச்சயம் ஏற்க முடியாது என்றார்.

எழுத்தாளர் பிரியதர்ஷனி என்பவர்க கூறுகையில், எனக்கு இந்த நியமனம், அதன் விதிகள� �� உள்பட எதுவுமே தெரியாது. ஆனால் மதுரை மக்களும், மதுரை நகரமும், மற்றவர்கள் முன்பு கேலிப் பொருளாகி விட்டதை மட்டும் உணர்கிறேன். மதுரையின் பெயர் நிச்சயம் மாசுபட்டு விட்டது என்பதில் யாருக்கு� ��் சந்தேகம் தேவையில்லை என்றார்.

மதுரை மக்களுக்கு ஆதீனம் என்ன விளக்கம் அளிக்கப் போகிறாரோ...?




comments | | Read More...

மே தினத்தில் 'பில்லா-2' பாடல், விஸ்வரூபம் 'டிரைலர்' வெளியீடு




அஜீத்தின் பில்லா-2 பாடல் வெளியீடும், கமலின் விஸ்வரூபம் பட டிரெய்லர் ரிலீசும் வருகிற மே 1-ந்தேதி ஒரே நாளில் நடக்கிறது. பில்லா-2 பாடல்களை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட தயாரிப்பு தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. முன்னணி நடிகர், நடிகைகளையும் விழாவுக்கு அழைக்க திட்டமிட்டனர்.

அஜீத் ஆடம்பரமில்லாமல் எளிமையாக பாடல்களை வெளியிட விரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரமாண்ட விழா நடத்தாமல் பாடல்களை ரிலீஸ் செய்கின்றனர்.

இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் பின்னணி பாடகர்கள் ஸ்டெப்னி, ஸ்வெதா பண்டிட், தன் விஷா, சுவிசுரேஷ், ஆண்ட்ரியா, ஜெர்மையா, ரஞ்சித் ஆகியோர் பாடல்களை பாடி உள்ளனர். அஜீத் பிறந்த நாள் மே 1-ந்தேதி என்பதால் அன்றைய தினம் பில்லா-2 பாடல்கள் வெளியாவதை ரசிகர்கள் ஆர்வமாய் எதிர் பார்க்கின்றனர்.

கமலின் விஸ்வரூபம் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது படக் குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்த படத்தில் கமலின் கெட்டப் எப்படி இருக்கும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

முதல் தடவையாக மே 1-ந்தேதி டிரைலர் மூலம் அவரது தோற்றம் தெரிய வர உள்ளது. தியேட்டர்களிலும் இணைய தளங்களிலும் அன்றைய தினம் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரை வெளியிடுகின்றனர்.

30 நொடிகள் பார்க்கும் வகையில் இந்த டிரைலரை தயார் செய்துள்ளனர். படத்தின் முக்கிய சீன்கள் இந்த டிரைலரில் சேர்க்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் கமல் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.



comments | | Read More...

மதுரை இளைய ஆதீனமாக ரஞ்சிதாவின் நித்யானந்தா பதவியேற்றார்




பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நட� ��்தி வருபவர் நித்யானந்தா. இவரை மதுரை ஆதீனம் தனது வாரிசாக அறிவித்தார். பெங்களூரு சென்று பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவுக்கு கிரீடத்தை சூட்டி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
 
நித்யானந்தாவுக்கு முறைப்படி முடிசூட்டு விழா மதுரை ஆதீனம் மடத்தில் இன்று காலை நடந்தது. நித்தியானந்தா முதலில் ஆதீனத்திற்கு தங்க கிரீடமும், துளசி மாலையும் அணி� ��ித்து ஆசி பெற்றார். பின்னர் நித்தியானந்தாவுக்கு ஆதீனம் தங்க கிரீடமும், உத்திராட்சை மாலை அணிவித்து வாரிசாக அறிவித்தார்.
 
பின்னர் நித்தியானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
 
ஆதீன மடம் என்பது ஒரு கடல் போன்றது. இதை செம்மையாக நடத்துவேன். சன்னிதான உத்தரவுபடி நான் நடப்பேன். என் மீத� ��ன குற்றச்சாட்டை சட்ட ரீதியாக நிரூபிப்பேன். நான் இந்த விஷயத்தில் யாரையும் குற்றம் சாட்டவில்லை. பழிப்பது தவறல்ல. அதற்கு பதில் சொல்வேன். ஆனால் சிலர் அழிக்க நினைக்கிறார்கள். அதுதான் தவறு என்கிறேன். வேதனைப்படுகிறேன்.
 
தமிழ்நாட்டில் 800 தியான மையம் உள்ளது. 12 லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள். எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்தாலும் இன்னும் இ� ��்கு தியான பீடம் நடந்து வருகிறது. பக்தர்கள் எல்லாம் வந்து செல்கிறார்கள். எனவே என்னை தமிழக மக்கள் ஏற்று கொள்வார்கள். என் ஆசிரமத்திற்கு எல்லோரும் வரலாம். அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என சொல்ல முடியாது. உலக அளவில் சிறந்த ஆன்மீகவாதிகளின் பெயர்களை வெளிநாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள ஸ்ரீரவி சங்கர், அமிர்தானந்தமயி, குருதேவ், என் பெயர் இடம் ப ெற்றுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
 
மதுரை ஆதீன மடத்தில் 293-வது மகா சன்னிதானமாக மனபூர்வமாக ஏற்று கொண்டு முழுமையாக பணியாற்றி சைவ சித்தானந்தத்தை உலகம் முழுவதும் பரப்ப பாடுபடுவேன். நானும் 292-வது சன்னிதானமும் சேர்ந்து ஆதீன மடத்தை முறையாக நடத்துவோம். மதுரை ஆதீனத்துக்குட்பட்ட 4 கோவில்கள் உள்ளது. 4 கோவில்களுக்கும் இந்த ஆண்டிற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இன்று முதல் ஆதீன மடத்தில் தினசரி அன்னதானம் வழங்கப்படும். 24 மணி நேரமும் இது வழங்கப்படும்.
 
குருவுக்கு (மதுரை ஆதீனம்) ரூ.1 கோடி பாத காணிக்கை வழங்கி இருக்கிறேன். மேலும் ரூ.4 கோடி பாத காணிக்கை சமர்பிக்க இருக்கிறேன். மேலும் எனது ஆசிரமத்தில் உள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், படித்த சன்னியாசிகள் 50 பேரை ஆதீன மடத்தின் � �ிர்வாகத்தை கவனிக்க மதுரைக்கு அனுப்பி வைப்பேன். எனது ஆசிரமத்தில் கல்வி பணியாற்றுவது போல மதுரை ஆதீன மடத்திலும் கல்வி பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பள்ளி, கல்லூரிகள் நிறுவப்படும். வருகிற ஜுன் 5-ந்தேதி கனகாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
 
இவ்விழாவையொட்டி 100 கிராமங்களில் பள்ளிக்கூடம் தொடங்கப்படும். எனக்கு 40 நாடுகளில் ஆசிரமம ் உள்ளது. 1 கோடியே 20 லட்சம் சீடர்கள் உள்ளனர். மதுரை ஆதீனம் எனது வயதை விட மிக பெரியவர். அனுபவசாலி. அவர் ஒரு ஆலமரம். அம் மரத்திற்கு கீழ் காளான் முளைப்பது இயற்கைதான். காளானாக இருந்து சிறப்பாக பணியாற்றுவேன். ஆதீனம் ஒரு கடல். நான் அதில் ஒரு துளிதான். இந்த கடலில் கலப்பதில் ஆனந்தமடைகிறேன். ஆதீனம் ஞானமிக்கவர். எனக்கு நல்ல வழி காட்டு பவர். எனவேதான் இந்த பெரிய பொறுப்பை ஏற்றேன். என் மீது பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. ஆன்மீக பணியாற்றும்போது ஓரிரு இடைïறு ஏற்படுவது வழக்கம்தான். இவ்வாறு அவர் கூறினார்.
 
மதுரை ஆதீனம் கூறியதாவது:-
 
இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞான சம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது. முன்பு மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் இந்த மடத்தின் நிர்வாகத்துக்குள் இருந்தது. பின்னர் அரசு எடுத்து கொண்டது. மதுரை ஆதீனம் 293-வது குரு சன்னிதானமாக நித்தி யானந்தா சுவாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது `திடீர்' என எடுத்து முடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக புதியவரை நியமிக்க யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்த அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள். சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்கள� �க இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர் குணம் போன்ற தகுதியடையவனாக இருக்கிறேன். இப்போது 293-வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்து எடுத்ததற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 
சிவன்- பார்வதி ஆசியுடன் நித்தி யானந்த சுவாமியை நியமித்து சம்பிரதாயபடி ஏற்று உள்ளோம். இவர் எழுச்சிமிக்கவர், ஆற்றல் மிக்கவர். நான� ��ம் அவரும் இணைந்து நிர்வாகத்தை நடத்துவோம். தந்தையும், மகனும் ஒரு கம்பெனியை, ஒரு துறையை எப்படி நிர்வகிப்பார்களோ அதுபோல் இருவரும் இணைந்து தந்தை, மகன் போல் நடத்துவோம். இவர் இங்கு (மதுரை) அடிக்கடி வருவார்.
 
கேள்வி: நித்தியானந்த சுவாமிக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறதே?
 
 பதில்: அவர்கள் புரியாமல் அறியாமை காரணமாக குற்றம் சாட்டுகிறார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger