News Update :
Powered by Blogger.

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததன் காரணமாக இளைஞர் பலி (Photo in)

Penulis : karthik on Thursday, 29 March 2012 | 00:50

Thursday, 29 March 2012


நீர்கொழும்பு, கல்கந்த சந்தியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தின்போது, மோட்டார் சைக்கிளொன்று தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக இளைஞர் ஒருவர் தீயில் கருகி மரணமடைந்துள்ளார்.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் இதன்போது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததன் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் தீயில் மரணமடைந்ததாகவும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் முற்றாக தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

comments | | Read More...

ரஷ்ய தயாரிப்பு ஏவுகணைகள் மூலமே விடுதலைப் புலிகள் விமானங்களைச் சுட்டு வீழ்த்தினர்.

 

ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்டே இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிக்கெப்டர் மற்றும் விமானம் ஒன்றின் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர் என்பது பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலகளினால் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகவே 'லயன் எயர்' பயணிகள் விமானம் தாக்குதலுக்கு இலக்கானது. இந்தத் தாக்குதலுக்கு ரஷ்ய ஏவுகணையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானம் மீது தாக்குதல் நடத்தியவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி சுட்டு வீழத்தப்பட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 'அன்டனோ' விமானத் தாக்குதலுக்கும் ரஷ்ய ஏவுகணைகளே பாவிக்கப்பட்டன. இந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வேறு சில விமானங்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் விமானம் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுதத்திய ஏவுகணையின் சிதைந்த பாகங்களும் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டன என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன

comments | | Read More...

ஆர்யா மீது மலையாள மாந்த்ரீகர்களை ஏவி விடும் அமலா பால்.

 

இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் மற்றும் ஹாட்டஸ்ட் காதல் ஜோடி யாரென்று கேட்டால் அது ஆர்யா – நயன்தாரா ஜோடிதான் என்று பலரும் அடித்துச் சொல்கிறார்கள்.'வேட்டை' சமயத்தில் மலையாள நடிகை அமலா பாலில் மட்டுமே டீ, காபி போட்டுக்குடித்துக்கொண்டிருந்த ஆர்யா, இப்போது அவரை சுத்தமாக கைகழுவி விட்டுவிட்டு, கேட்பாரற்று கிடந்த நயன்தாராவை வேட்டை'யாடிவிட்டாராம்.

சில தினங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது பழைய வீடு ஒன்றை புதுப்பித்து, புதுமனை புகு விழா நடத்திய ஆர்யா, வருவாரோ வரமாட்டாரோ என்ற சந்தேகத்தில் நயன் தாராவையும் அழைத்திருந்தாராம்.

மிகப்பிரமாதமான அலங்காரத்தோடு விழாவுக்கு வந்த நயன், அனைத்து வி.ஐ.பி. களும் போனபிறகும் கூட , ஆர்யாவுடனே முழு நாளைக் கழித்து ஆறுதல் தேடிக்கொண்டாராம்.

அன்று முதல் அவர்கள் உறவில் நெருக்கம் ஏற்பட்டு, காதலில் கசிந்துருகி வருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் வயிறெரிகின்றன.

நயன் தாராவை அழைத்து விட்டு தன்னை கண்டு கொள்ளாமல் போன ஆர்யா மீது பெரும் ஆத்திரமடைந்த அமலா பால், மலையாள மாந்த்ரீகர்கள் சிலரை அழைத்து ஆர்யாவின் பேரில் சூன்யம் வைக்கலாமா என்று சோதித்து வருவதாக தகவல்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger