News Update :
Home » » தமிழ் ஈழம் மலர உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்: சீமான் பேட்டி

தமிழ் ஈழம் மலர உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்: சீமான் பேட்டி

Penulis : karthik on Thursday 17 May 2012 | 08:16


நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 
ஈழப்போர் முடிந்து 3 ஆண்டுகளாகிறது. மே 17-ந் தேதியான இதே நாளன்று 50 ஆயிரம் பேர் இறந்தனர். மொத்தத்தில் ஈழத்தில் 1 1/2 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இன்னும் முள் வேலிக்குள் தமிழர்கள் அடைபட்டிருப்பது வேதனை தருகிறது. 

இந்த வேதனைகள் ஒருபோதும் அழியாது. ஈழத்தில் பலியானவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் மே மாதம் அஞ்சலி செலுத்தி வருகிறோம். தமிழினப் படுகொலை நடந்து முடிந்த 3-வது ஆண்டு நினைவு நாளான நாளை(18-ந் தேதி) தமிழின படுகொலைக்கு நியாயம் கோரும் வகையில் கோவையில் நாம் தமிழர்கட்சி மாபெரும் பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் நடத்துகிறது. 

கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலை அருகே கூடி அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு சிவானந்தா காலனியை அடைவோம். அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும். நாம் தமிழர் கட்சி 2010-ம் ஆண்டு மே 18-ந் தேதி தொடங்கப்பட்டது. நாளை 3-ம் ஆண்டு தொடங்குகிறது. 

ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததால் எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வாகும். ஈழம் பெற உலகில் உள்ள 12 கோடி தமிழர்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

மேற்கண்டவாறு சீமான் கூறினார்.





















Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger