News Update :
Home » » எம்.பி. பதவி கொடுத்ததற்கு பதில் தெண்டுல்கருக்கு பாரத ரத்னாவிருது கொடுத்து இருக்கலாம்: அன்னாஹசாரே

எம்.பி. பதவி கொடுத்ததற்கு பதில் தெண்டுல்கருக்கு பாரத ரத்னாவிருது கொடுத்து இருக்கலாம்: அன்னாஹசாரே

Penulis : karthik on Wednesday 2 May 2012 | 23:48



 பிரபல காந்தியவாதி அன்னாஹசாரே ஊழலை ஒழிக்க வலுவான லோக் ஆயுக்தா சட்டம் தேவை என்று வலியுறுத்தி வருகிறார். மக்களிடம் லோக் ஆயுக்தா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் மராட்டிய மாநிலத� ��தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அந்த பயணத்துக்கிடையே அவுரங்கா பாத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- 

தெண்டுல்கருக்கு மேல்- சபை எம்.பி. பதவி கொடுத்திருப்பதாக தகவல் வெளியானதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மத்திய அரசில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

தெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் நம்ப முடியாத அளவுக்கு சாதனைகள் படைத்தவர். அவரை உரிய முறையில் கவுரவப்படுத்த வேண்டும். பாராளுமன்ற மேல்- சபை எம்.பி. பதவி அவருக்கு தேவை இல்லை. 

தெண்டுல்கருக்கு எம்.பி. பதவி கொடுத்ததற்கு பதில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவித்து இருக்கலாம். அதுதான் பொருத்தமானதாக இருக்கும். தெண்டுல்கருக்கு மேல்- சபை எம்.பி. பதவி கொடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியான போது நான் எந்த அளவுக்கு கு� ��ப்பம் அடைந்தேனோ, அதே மாதிரி ஏராளமானவர்கள் குழம்பி போனார்கள். பதவி கொடுப்பதை விட விருது கொடுப்பதுதான் தெண்டுல்கருக்கு பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger