News Update :
Home » » முல்லைப் பெரியாறும்: அஞ்சலியின் தமிழ் பற்றும்!

முல்லைப் பெரியாறும்: அஞ்சலியின் தமிழ் பற்றும்!

Penulis : karthik on Thursday 12 January 2012 | 01:38

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள டேம் 999
படத்தில் நடித்த வினய்யுடன் , தமிழில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்
நடிகை அஞ்சலி.
' உன்னாலே உன்னாலே ' படம் மூலம் தமிழில்அறிமுகமான வினய் , சமீபத்தில்
நடித்த படம் கேரள இயக்குனரால் எடுக்கப்பட்ட ' டேம் 999 '. அணையை
உடைக்காவிட்டால் 35 லட்சம் பேர் இறந்துவிடுவார்கள் என்ற பொய்யான
பிரச்சாரத்தை கேரள அரசின் உதவியுடன் செய்தது இந்த படம். ஆனால்
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்தப் படம் இரண்டு வாரங்கள் கூட
தாக்குப்பிடிக்கவில்லை.
' டேம் 999 ' படத்துக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால்
அப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் நடித்த வினய் , விமலா
ராமன் மீதும் ரசிகர்கள் ஆத்திரத்தில்உள்ளனர்.
இந்த நிலையில் வினய்யை வைத்து தயாராகும் புதுப்படமொன்றில் அவருக்கு
ஜோடியாக நடிக்க அஞ்சலியிடம் கேட்டுள்ளனர். ஆனால் வினய்யுடன் நடிப்பதால்
தமிழ் ரசிகர்கள் என் மீது ஆத்திரப்பட வாய்ப்புள்ளது. எனவே எனக்கு இந்த
வாய்ப்பே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்அஞ்சலி!
அஞ்சலிக்கு தெரிந்தது கூட , வினய்யை வைத்து படமெடுக்க முயலும்
தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் தெரியவில்லையே!
இதே அஞ்சலி இலங்கை பிரச்சனையில் கூட தமிழர்கள் தாக்கப்படுவதை எதிர்த்து
தைரியமாக குரல் கொடுத்த ஒரே நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழை
தாய்மொழியாக கொள்ளாவிட்டாலும்,அவரை வாழவைக்கும் தமிழ்மொழி மீதும்
தமிழர்கள் மீதும் பற்றும் பாசமும் வைத்திருக்கும் அஞ்சலிக்கு நமது விழியே
பேசு வலைத்தள வாசகர்கள் சார்பாக நன்றிகள்....தெரிவித்துகொள்கிறேன்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger