News Update :
Home » » ராஜபக்சே தங்கை கணவர் ராமேஸ்வரம் கோவிலில் தாக்கப்பட்டார்

ராஜபக்சே தங்கை கணவர் ராமேஸ்வரம் கோவிலில் தாக்கப்பட்டார்

Penulis : karthik on Tuesday 10 January 2012 | 00:52

ராஜபக்சேவின் தங்கை நிரூபமாவின் கணவர் திருக்குமரன் நடேசன் தனது
குழந்தைகளுடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது அங்கு
மதிமுகவினரும் , நாம் தமிழர் அமைப்பினரும் இணைந்து முற்றுகைப் போராட்டம்
நடத்தினர். அப்போது நடேசன் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபக்சேவின் தங்கை நிரூபமா. இவரது கணவர் நடேசன். இவர் அடிக்கடி
தமிழகத்திற்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுப் போவது வழக்கம்.
பெரும்பாலும் திருச்செந்தூர் , ராமேஸ்வரம் ஆகிய கோவில்களுக்கு அடிக்கடி
வருவார்.
இந்த நிலையில் தனது குழந்தைகளுடன் நடேசன் சாமி கும்பிட ராமேஸ்வரம்
வந்தார். அவரது வருகை குறித்த தகவல் பரவியதும் மதிமுகவினரும் , நாம்
தமிழர் அமைப்பினரும் அங்கு திரண்டனர். நடேசனை முற்றுகையிட்டு் போராட்டம்
நடத்தினர்.
கோவிலுக்கு வரக் கூடாது , தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி
கோஷமிட்டனர். அப்போது திடீரென சிலர் நடேசனை தாக்கி விட்டனர். இதனால்
பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீஸார் குறுக்கிட்டு நடேசனையும் , அவரது குழந்தைகளையும்
பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் செனறனர்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger