News Update :
Home » » யுவராஜ் சிங் சரியான 'கடலைப் பார்ட்டி'-ப்ரீத்தி ஜிந்தா

யுவராஜ் சிங் சரியான 'கடலைப் பார்ட்டி'-ப்ரீத்தி ஜிந்தா

Penulis : karthik on Tuesday 4 October 2011 | 09:43

 
 
 
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஒரு பெரிய 'கடலைப் பார்ட்டி' என்று இந்தி நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
 
நடிகை பிரீத்தி ஜிந்தாவும், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் டேட் செய்தார்கள் என்று ஐபிஎல் போட்டிகளின்போது படு பரபரப்பாக பேசப்பட்டது. இது உண்மையா, இல்லையா என்பது இன்னும் தெளிவாகாத விஷயமாகவே உள்ளது.
 
இந்நிலையில் யுவராஜ் சிங் பெரிய 'கடலைப் பார்ட்டி' என்று கூறியுள்ளார் பிரீத்தி. கடந்த 2009-ம் ஆண்டின் ஐபிஎல் சீசனின்போது பிரீத்தியும், யுவராஜும் பார்க்கும்போதெல்லாம் கட்டிப்பிடித்துக் கொண்டனர். அவர்களைப் பற்றி தான் பேச்சாகக் கிடந்தது. ஆனால் பிரீத்தி எங்களுக்குள் எதுவும் இல்லை, இது சும்மா உற்சாகப்படுத்தத்தான் கட்டிப்பிடி வைத்தியம் என்று கூறி மறுத்தார்.
 
இந்நிலையில் பிரீத்தி நடத்தும் அப் க்ளோஸ் அன்ட் பர்சனல் வித் பிரீத்தி ஜிந்தா என்னும் நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் கலந்து கொண்டார். அப்போது பிரீத்தி யுவராஜைப் பார்த்து, நீங்க 'பெரிய கடலைப் பார்ட்டி' தானே, அதனால் தான் உங்க பெயர் பலருடன் சேர்ந்து அடிபடுகிறது என்று காலை வாரினார் ப்ரீத்தி.
 
அதற்கு யுவி கூறியதாவது, நீங்கள் யார் கூடயோ சுத்த கடைசியில் என்னை பலிகடாவாக்கி விட்டீர்கள். நான் திருமணமாகாதவன் என்பதால் தான் இத்தனை பிரச்சனையும். ஏன் நீங்க மட்டும் என்னவாம்? உங்களையும், பிரெட் லீயையும் சேர்த்து பேச்சு அடிபட்டதே, இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்? என்று பதிலுக்கு பலமாக வாரினார்.
 
என் பணம், புகழுக்காக என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணை நான் மணக்க மாட்டேன். நான் கிரிக்கெட், கிரிக்கெட் என்று பயணம் செய்து கொண்டே இருப்பவன். என்னை புரிந்து கொண்டு நடக்கும் பெண் தான் வேண்டும் என்றும் கூறினார் யுவராஜ்.
 
மொத்தத்தில் ரெண்டு பேரும் 'வறுகடலைப் பார்ட்டி'கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger