கேரளாவில் 44 நதிகள் இருக்கின்றன..அவற்றில் வெறும் எட்டு சதவீத நீரைத்தான் கேரளமே பயன்படுத்துகிறது..மீதம் உள்ள 92 விழுக்காடு நீர் வெறுமனே கடலில் கலக்கிறது..
முல்லை பெரியார் ஆணை மூலம் கிடைக்கும் நீர் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
மேலும் இந்த பெரியாறு ஆணை மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் நீர்தான் அவர்களுக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களுக்கு ஜீவநாடி...
மலையாளிகள் உண்ணும் சோறும்,குழம்புக்கு காய்கறியும்,தின்னும் பழமும், பூஜை மலரும் அவ்வளவு ஏன் கறிவேப்பிலை கூட தமிழகத்தில் இருந்து தான் போகிறது..
உண்மையில் மலையாளிகள் செய்ய வேண்டியது வீணாகும் 92 விழுக்காடு நீரை தமிழகத்தில் உள்ள உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு கொடுத்து அதற்குரிய விலையை பெற்று எல்லா பொருட்களையும் கிடைக்க பெறனும்..
இதை சொன்னவர் பிரபல மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா..
home
Home
Post a Comment