News Update :
Home » » யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது

Penulis : karthik on Saturday 24 December 2011 | 18:33

 
 
 
 
 
பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் 5 வயது சிறுமியை 15 வயது பள்ளி மாணவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மாணவனை கைது செய்துள்ளனர்.
 
நெலமங்களாவில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது சக மாணவன் ஒருவனின் செல்போனில் விரும்பத்தகாத படங்களை பார்த்ததன் காரணமாகவே இந்த சம்பவத்திற்கு காரணமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
சம்பவத்தன்று, அந்த மாணவன் அதே பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவியை வீட்டில் விட்டுவிடுவதாக அழைத்துச்சென்று அருகில் இருந்த காலி இடத்தில் வைத்து அந்த மாணவியை துன்புறுத்தியுள்ளான். அப்போது அந்த பிஞ்சு மனம் மாறாத சிறுமி, என்ன நடக்கிறது என்று புரியாமல் விடுபட முயலவே, அந்த சிறுவன், அங்கிருந்த கல்லை எடுத்து மாணவியின் தலையில் அடித்துவிட்டு சிறுமி மயக்கமடைந்தபின் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான்.
 
சுயநினைவிழந்த மாணவி
 
மாலை வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததை உணர்ந்த உறவினர்கள், அவளை தேடிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிறுமியின் புத்தகப் பை அங்கு கிடந்ததை கண்டுபிடித்தனர். அருகில் இருந்த காலி நிலத்தில் சுயநினைவற்ற நிலையில் இருந்த சிறுமியை கண்ட பெற்றோர்கள் உடனடியாக யஷ்வந்த்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
சிறுவர்கள் கைகளில் செல்போன்
 
சிறுமியின் நிலைக்கு காரணமான பள்ளி மாணவன் மீது நெலமங்ளா போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
 
சிறுவர்களுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்ததன் மூலம் மிகப்பெரிய தவறுக்கு வித்திட்டிருக்கின்றனர் அவனது பெற்றோர், எனவே 19 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்களின் கைகளில் செல்போன் சிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்,

 


Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger