News Update :
Home » » தமிழக அமைச்சர் கருப்பசாமி மரணம்

தமிழக அமைச்சர் கருப்பசாமி மரணம்

Penulis : karthik on Saturday 22 October 2011 | 05:27

 
 
 
தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சி கருப்பசாமி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 56.
 
இரத்த புற்று நோயால் அவதிப்பட்ட அவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்ற இன்று மரணமடைந்தார். இவர் சங்கரன்கோவில் (தனி) தொதிகு எம்.எல்.ஏ.
 
ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசில் அவர் கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். கடந்த ஜூன் 15-ம் தேதி நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது இவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரானார்.
 
தலித் இனத்தைச் சேர்ந்த விவசாயியான இவர், சங்கரன்கோயில் தொகுதி்யில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றவர் கருப்பசாமி.
 
ரத்தப் புற்று நோயால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த கருப்பசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சமீபத்தில் அவர் உடல்நிலை மோசமடைந்தது. எனவே அவரது பொறுப்புகளை அமைச்சர் சிவி சண்முகம் கவனித்து வந்தார்.
 
அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஒரே அமைச்சர் கருப்பசாமியாகத்தான் இருக்கும். நோய் தீவிரமடைந்துவிட்டதால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையி்ல் அவர் இறந்தார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger