News Update :
Powered by Blogger.

16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜாமினில் விடுதலை Jagan Mohan Reddy freed on bail

Penulis : Tamil on Monday, 23 September 2013 | 06:22

Monday, 23 September 2013

16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜாமினில் விடுதலை Jagan Mohan Reddy freed on bail
Tamil NewsToday, 05:30

ஐதராபாத், செப். 23-

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சிலருக்கு எதிராக 10 குற்றப்பத்திரிக்கைகள் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இதில் 5 வழக்குகள் இந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்டவையாகும்.

முன்பு ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டி முதல் அமைச்சராக இருந்தபோது, ஆட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி ஜெகன் மோகனின் கம்பெனி மற்றும் தனியார் நிறுவனங்களில் அவர் முதலீடுகள் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

ஜெகன் மோகன் ரெட்டியின் மீதான குற்றப்பத்திரிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பின் அவர் ஜாமின் கோரி விண்ணபிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது.

இந்நிலையில் குற்றப்பத்திரிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமின் மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவரது மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, 2 லட்சம் ரூபாய் ரொக்க ஜாமீனில் ஜாமின் வழங்குவதாக தீர்ப்பளித்தார். மேலும், அவர் ஐதராபாத்தை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இதனால், ஐதராபாத் சஞ்சல்குடா சிறையில் 16 மாத சிறைவாசத்துக்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜாமினில் விடுதலையானர். 
...
Show commentsOpen link

comments | | Read More...

கோலிவுட்டில் வலம் வரும் நஸ்ரியா ஜெய் காதல் கிசு கிசுக்கள்! Actress nasriya love news

Penulis : Tamil on Sunday, 22 September 2013 | 08:57

Sunday, 22 September 2013

கோலிவுட்டில் வலம் வரும் நஸ்ரியா ஜெய் காதல் கிசு கிசுக்கள்!

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

ஜெய்-நஸ்ரியா காதலிப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. சிம்பு, ஹன்சிகாவை தொடர்ந்து ஜெய்-நஸ்ரியா புதிய காதல் ஜோடிகளாக உலா வருவதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. 'திருமணம் என்னும் நிக்ஹா' என்ற படத்தில் ஜெய்-நஸ்ரியா ஜோடியாக நடித்து வருகின்றனர்.

அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அது காதலாக மலர்ந்திருப்பதாக யூனிட்டில் உள்ளவர்கள் முணுமுணுக்கின்றனர். நஸ்ரியாவும், ஜெய்யும் எந்நேரமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிய வண்ணம் இருக்கின்றனர். ஷூட்டிங் முடிந்தபிறகும் மணிக்கணக்கில் செல்போனில் பேசுகிறார்களாம்.

ஏற்கனவே 'ராஜா ராணி' படத்தில் இணைந்து நடித்தாலும் இவர்கள் இருவருக்கும் பொது நண்பர் மூலம் நட்பு மலர்ந்தது. அன்று முதலே நஸ்ரியா மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்ட ஜெய், 'எந்த ஹீரோவுடனும் நெருக்கமான காட்சிகளில் நடிக்காதிங்க' என்று தடை விதித்திருப்பதாக கோலிவுட் பச்சி கிசுகிசுக்கிறது.

இது இயக்குனர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சமீபத்தில் டாப் ஹீரோ ஒருவருடன் முதலிரவு காட்சியில் நடிக்க கேட்டபோது நஸ்ரியா மறுத்ததுடன் ஷூட்டிங்கிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறிவிட்டாராம்.

பிறகு அவரை யூனிட்டில் உள்ளவர்கள் தொடர்புகொண்டபோது, 'நெருக்கமான காட்சிகளில் நடிக்க வற்புறுத்தமாட்டோம் என்று எழுதி தந்தால்தான் வருவேன்' என தெரிவித்தாராம். நஸ்ரியா-ஜெய் நெருக்கம் பற்றித்தான் இப்போது கோலிவுட் ஹாட் பேச்சாக உள்ளது.

Show commentsOpen link

comments | | Read More...

வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தேர்தல் அதிகாரி தகவல் Apply online for voter identity card Election Officer Information

Penulis : Tamil on Saturday, 21 September 2013 | 08:14

Saturday, 21 September 2013

வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தேர்தல் அதிகாரி தகவல் Apply online for voter identity card Election Officer Information
Tamil NewsToday,

சென்னை, செப்.21-

வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 944 பிரவுசிங் சென்டர்களுடன் தேர்தல் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயரை சேர்க்கவே, முகவரியை மாற்றம் செய்யவோ பிரவுசிங் சென்டர்களில் சென்று மாற்றம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

மேலும், ஏற்காடு இடைத் தேர்தலை வரும் அக்.16-ந் தேதிக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
...
Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger