News Update :
Powered by Blogger.

நாளை இளவரசனின் உடல் எய்ம்ஸ் டாக்டர்கள் மூலம் மறு பிரேத பரிசோதனை

Penulis : Tamil on Friday, 12 July 2013 | 02:21

Friday, 12 July 2013


தர்மபுரி காதல்-கலப்பு திருமண விவகாரத்தில் காதலன் இளவரசனின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறுகிறார்கள். எனவே இளவரசன் பிணத்தை மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பட காட்சிகளை ஐகோர்ட்டில் நீதிபதிகள், மத்திய-மாநில அரசு டாக்டர்கள், வக்கீல்கள் பார்த்தனர்.

பிரேத பரிசோதனை பற்றிய ஆய்வு அறிக்கையை டாக்டர்கள் தாக்கல் செய்த பின்பு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். ஆனால் இளவரசன் உடலை தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
comments | | Read More...

டென்னிஸ் டிக்கெட் வாங்க வந்த இளம்பெண் கற்பழித்த வாலிபர்

Penulis : Tamil on Thursday, 11 July 2013 | 08:33

Thursday, 11 July 2013

இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன்
டென்னிஸ் தொடரில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர்
இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர்
வீரரான ஆண்டி முர்ரே, செர்பியாவின் நோவக்
ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம்
வென்றார்.
இறுதிப் போட்டியில் முர்ரேயின் ஆட்டத்தைக்
காண ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் வாங்க
காத்திருந்தனர். அவர்களுக்காக விம்பிள்டன்
பார்க்கில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்,
அங்கு டிக்கெட்டுக்காக காத்திருந்த 34
வயது பெண்ணை, 30 வயது மதிக்கத்தக்க
ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக
கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புகாரின் அடிப்படையில் அந்த
வாலிபரை போலீசார்
கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர்
அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரிடம்
செப்டம்பர் மாதம் மீண்டும்
விசாரணை நடத்தப்படும்
என்று ஸ்காட்லாந்து யார்டு போலீசார்
தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட
பெண்ணுக்கு மருத்துவ
பரிசோதனை செய்யப்பட்டது.

comments | | Read More...

பெருந்தலைவர் காமராஜர் போல மீண்டும் ஒரு தலைவர் வர வேண்டும்

Penulis : Tamil on Wednesday, 10 July 2013 | 23:30

Wednesday, 10 July 2013

பெருந்தலைவர் காமராஜர் போல மீண்டும் ஒரு தலைவர் வர வேண்டும். அவர் தந்தது போல பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா
முழுமைக்கும் வர வேண்டும் என்ற ஏக்கம் அவரது வாழ்க்கை வரலாற்றை படித்தவர்களுக்கும் கேள்விப்பட்டவர்களுக்கும் இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் காமராஜரின் வாழ்க்கை, இன்றைய இளம் தலைமுறையினரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் திரண்டிருந்த மாணவ – மாணவிகளின் கூட்டமே சாட்சி.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger