News Update :
Powered by Blogger.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு: ஜெயலலிதா அறிவிப்பு

Penulis : karthik on Friday, 14 September 2012 | 23:51

Friday, 14 September 2012

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு: ஜெயலலிதா அறிவிப்பு கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு: ஜெயலலிதா அறிவிப்பு
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, செப்.15-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1974-ஆம் ஆண்டு கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவினை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்ததன் காரணமாக, ராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த தமிழக மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மேற்கு வங்க மாநிலம் "பெருபாரி" வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைச் சுட்டிக்காட்டி, கச்சத்தீவினை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் நான் 2008-ம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற ம� �றையில் வழக்கு தொடர்ந்தேன்.

இது மட்டுமல்லாமல், கடந்த 2011 ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவுடன், இந்த வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை தன்னை ஒரு வாதியாக சேர்த்துக் கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்ற நடவடிக்கை எடுத்தேன� ��.

இந்தத் தீர்மானத்தினையடுத்து, தமிழ்நாடு அரசின் வருவாய் துறையும் மேற்படி வழக்கில் தன்னை ஒரு வாதியாக இணைத்துக் கொண்டது. என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளு மன்ற இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் "பெருபாரி" வழக்கில் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டி, இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பி� �்கு முற்றிலும் முரணான வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், கச்சத்தீவை தாரை வார்க்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டது செல்லத்தக்கதல்ல என்று எடுத்துரைத்து இருக்கிறேன்.

தற்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் குறையாத இன்றைய நிலையில், அது குறித்து 14.9.2012 அன்று எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத்துறை செயலாளர், அரசு தலைமை வழக்குரைஞர், அரசு கூடுதல் தலைமை வ ழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்ட ஒப்பந்தங்கள் செல்லத்தக்க தல்ல என தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றம் உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி ஒரு மனுவினை தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்படும் என்பதைத் தெரிவ� �த்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
comments | | Read More...

குடியாத்தம் அருகே வீட்டில் வெடிகுண்டு வெடித்து விவசாயி பலி: 4 பேர் படுகாயம்

குடியாத்தம் அருகே வீட்டில் வெடிகுண்டு வெடித்து விவசாயி பலி: 4 பேர் படுகாயம் குடியாத்தம் அருகே வீட்டில் வெடிகுண்டு வெடித்து விவசாயி பலி: 4 பேர் படுகாயம்
குடியாத்தம் அருகே வீட்டில் வெடிகுண்டு வெடித்து விவசாயி பலி: 4 பேர் படுகாயம்

குடியாத்தம், செப்.15-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமி அடுத்த பொம்மனாங்குளத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது43). விவசாயி. இவருக்கு முனியம்மாள் (38) என்ற மனைவியும், லோகேஸ்வரி (16), கோட்டீஸ்வரி (13), பரமேஸ்வரி (12), என்ற மகள்களும், ரங்கநாதன் (8) என்ற மகனும் உள்ளனர்.

குமரேசனின் வீடு மலையடிவாரத்தை ஓட்டியவாறு உள்ள நிலத்தில் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பலரது வீடுகள் ஆங்காங்கே வெகு தூர இடைவெளியில் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் குமரேசன் வீட்டில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. இந்த வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்டுள்ளது.

வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து கிராம மக்கள் விரைந்து சென்று பார்த்த போது குமரேசனின் மாடி வீடு இடிந்து தரைமட்டமாகி கிடந்தது. இடிபாட்டுக்குள் குமரேசன் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது மனைவி முனியம்மாள், மகள்கள், லோகேஸ்வரி, கோட்டீஸ்வரி, மகன் ரங்கநாதன் ஆகியோர் படுகாயங்களுடன் கிடந்தனர்.

பின்னர் அவர்களை கிராம மக்கள் மீட்டு 108 ஆம்புலன் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முனியம்மாள் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். வெடிவிபத்து நடந்த போது குமரேசனது மகள் பரமேஸ்வரி வீட்டிற்கு வெளியே இருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

மலையடிவாரத்தையட்டி குமரேசன் நிலம் உள்ளதால் அடிக்கடி அந்த நிலத்தில் காட்டுப்பன்றிகள் மட்டும் காட்டு விலங்குகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. அதனை தடுக்க குமரேசன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் வீடு இடிந்து பலியானதாகவும் தெரியவந்துள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. கணேசமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
comments | | Read More...

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை



பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை

மருத்துவரும், நடிகருமான 'பவர் ஸ்டார்' சீனிவாசன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி, அதில் அவரே நடித்தும் வருகிறார். இவர் நடித்த 'லத்திகா' படம் இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது. இதன்பிறகு, சந்தானம் தயாரித்து நடிக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் இன்னொரு நாயகனாகவும், சங்கர் இயக்கும் 'ஐ' படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் என்பவர் சீனிவாசன் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தனக்கு சீனிவாசன் 10 கோடி கடன் தருவதாகக் கூறி, சொத்து ஆவணங்களையும், ஆவண சரிபார்ப்பு மற்றும் இதர பணிகளுக்காக ரூ.65 லட்சமும் கேட்டார். அனைத்தையும் வாங்கிக் கொண்டு இதுவரை எனக்கு கடன் வழங்கவில்லை. கொடுத்த பணத்தையும் �® �ிருப்பி தரவில்லை என கூறியுள்ளார்.

எனவே, சீனிவாசனை கீழ்ப்பாக்கம் போலீசார் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் மேலும் 2 வடமாநிலத்தவர்களிடம் இதுபோல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger