News Update :
Powered by Blogger.

கசாபுக்கு மரணதண்டனை தீர்ப்பின் நகல் வழங்கப்பட்டது

Penulis : karthik on Tuesday, 11 September 2012 | 21:46

Tuesday, 11 September 2012


கசாபுக்கு மரணதண்டனை தீர்ப்பின் நகல் வழங்கப்பட்டது கசாபுக்கு மரணதண்டனை தீர்ப்பின் நகல் வழங்கப்பட்டது

மும்பை தாக்குதல்  தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு விதித்த மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள க ுண்டுகள் துளைக்க முடியாத பாதுகாப்பான ஒரு முட்டை வடிவிலான சிறையில் பத்திரமாக அவன் வைக்கப்பட்டுள்ளான்.
 
மரணதண்டனை குறித்த உறுதிபடுத்தப்பட்ட தீர்ப்பு நகலில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அவன் கையெழுத்தி�® �்டு உள்ளான். அதன் ஒரு மாதிரி நகல் அவனுக்கும் மற்றொரு மாதிரி நகல் உச்ச நீதிமன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இன்று அவனுக்கு மரணதண்டனை தீர்ப்பு குறித்த நகலை அதிகாரிகள் அவனிடம் கொடுத்à ��னர். அப்போது அவனிடம் மரணதண்டனை குற்றவாளியான உனக்கு அதிலிருந்து விடுதலை பெற ஜனாதிபதிக்கு கருணை மனு வழங்கும் உரிமை இருக்கிறது என்று எடுத்து கூறினர்.
 
அதற்கு அவன் எதும் பதிலளிக்காமல் மவுனமாக இருந்துவிட்டா ன் என்று கூறப்படுகிறது. மரண தண்டனையிலிருந்து விடுதலை வேண்டி கசாப் விண்ணப்பித்தால் அதிகுறித்து உடனடியாக பரிசீலிக்கப்படும் என்று உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே முன்பு கூறியிருந்தார்.


/

comments | | Read More...

சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள்



சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள் சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள்

போலீசில் சரணைடைய வந்த போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை அவரது ஆதரவாளர்கள் திருப்பி அனுப்பினர்.

முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிராக போராட்டக்காரர்கள் கடந்த ஞாயிற்றுகிழமை முதல் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இடிந்தகரை, கூடங்குள�® �்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார், போராட்டக்காரர்கள் என பலர் காயமைடந்தனர். இதையடுத்து இந்த போராட்டம் தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கும் பரவியது. இது தொடர்பாக இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவி்த்துள்ளனர்.

போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தலைமறைவானார். மக்களின் நலன் கருதி தான் கூடங்குளம் போலீசில் சரணடையப் போவதாக அவர் நேற்று அறிவித்தார். இதையà ��ுத்து நேற்று மாலை இடிந்தகரை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார்.

இதற்கிடையே ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு இடிந்தகரை வந்தார். இந்நிலையில் தான் அறிவித்தவாறு சரணடைய உதயகுமார் கிளம்பியதாகவும், போராட்டக்காரர்கள் அவரை சரணடையவிடாமல் படகில் ஏற்றி திருப்பி அனுப்பியதகாகவும் தகவல் கிடைத்துள்ளது.


/

comments | | Read More...

இரவு நேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்வாரியத்திற்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு




இரவு நேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்வாரியத்திற்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு இரவு நேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்வாரியத்திற்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மின்வ ெட்டு கூடாது என்று மின்சார வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரவில் மின்வெட்டு கூடாது என்ற மனுதாரரின் கோரிக்கையை மின்சாà �° வாரியம் பரிசீலனை செய்யலாம். ஆனால் இரவுநேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்சார வாரியத்திற்கு உத்தரவிட முடியாது.போதிய அளவில் மின்சாரம் இருப்பதை உறுதி செய்த பின்னரே மின்வெட்டை ரத்து செய்ய முடியும் என்றும் நீதிபதி கூறினார்.




/

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger