News Update :
Powered by Blogger.

குளியலறையில் +1 மாணவியை கற்பழித்தவர் கைது

Penulis : karthik on Saturday, 25 February 2012 | 05:02

Saturday, 25 February 2012

 

சேலம் அன்னதானப்பட்டி லைன்மேடு வேலுதெருவை சேர்ந்தவர் தர்மன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு செல்வி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற மகள் உள்ளார். இவர் குகை பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

இதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பாண்டியன் (28). இவர் செல்வியை காதலித்து வந்தார். கடந்த 12 ந்தேதி இரவு செல்வியை, பாண்டியன் பேசுவதற்கு தனது வீட்டின் குளியலறைக்கு அழைத்தார்.

இதையடுத்து அங்கு வந்த செல்வியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த பாண்டியன், நான் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவரை கற்பழித்து உள்ளார்.

இதையடுத்து செல்வி நடந்த சம்பவங்களை தனது தாய் லட்சுமியிடம் கூறினாள். அவர் பாண்டியன் வீட்டிற்கு சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டார். அதற்கு பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இதையடுத்து லட்சுமி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியன் அவரது தந்தை ராஜேந்திரன், தாய் கோகிலா, தாத்தா சுப்பையா ஆகியோரை கைது செய்தனர்.

comments | | Read More...

சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கல

 
 
 
சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று பத்மப்ரியா கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என் அப்பா ராணுவ அதிகாரி. அடிக்கடி இடம் மாற வேண்டி இருக்கும். இதனால் எனக்கு நண்பர்கள் குறைவு. புத்தகங்கள்தான் எனக்கு நண்பர்கள். சினிமாவுக்கு வரும் முன்பு மல்ட்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்த்தேன். கை நிறைய சம்பளம். அங்கேயே வேலை பார்த்திருந்தால், இத்தனை நேரம் நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்து திருமணமாகி செட்டில் ஆகியிருப்பேன். சினிமாவுக்கு வந்த பிறகு, வெளியுலக தொடர்பு குறைந்துவிட்டது. பெரும்பாலான நேரம் ஷூட்டிங் லொக்கேஷன்களிலும் மற்ற நேரம் ஓட்டல் அறைகளிலுமே கழிகிறது. சினிமாவை பொருத்தவரை மம்மூட்டி, மோகன்லால், திலிப், பிருத்விராஜ், ஜெயராம் போன்றவர்களுடன் நடிக்கிறேன். எல்லோருமே திருமணம் ஆனவர்கள். சினிமாவில் எனக்கு பொருத்தமான மாப்பிள்ளை யாரும் இல்லை. பொருளாதார சுதந்திரம் மட்டுமே எல்லா சுதந்திரத்தையும், முழு மகிழ்ச்சியையும் கொடுத்துவிடாது. வேலைக்கு போகும் பெண்கள் வீட்டுக்கு வந்ததும் தினசரி வேலைகளை கவனிக்க வேண்டி உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த பெண்ணுக்கு இரவில்தான் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும். எந்த ஆணும் குண்டான மனைவியை பார்ட்டிகளுக்கு அழைத்து செல்ல விரும்பவதில்லை. அதேநேரம் வீட்டு வேலையை பகிர்ந்துகொள்ளவும் பல ஆண்கள் முன்வருவதில்லை.



comments | | Read More...

சூர்யா,கார்த்திகாக காத்திருக்கும் சாந்தகுமார்

 


இயக்குன‌ரின் படம் என்று மௌனகுருவை சொல்லலாம். ஸ்கி‌ரிப்டின் நேர்த்திக்காக ஓடிய படம்.

மௌனகுருவை இயக்கிய சாந்தகுமார் ஸ்டுடியோ கி‌ரீன் ஞானவேல்ராஜாவுக்கு சொன்ன ஒன் லைன் அவருக்கு‌ப் பிடித்திருக்கிறது. உடனே நம்ம பேன‌ரில் படம் பண்ணலாம் என இழுத்துப் போட்டிருக்கிறார். ஸ்டுடியோ கி‌‌ரீனுக்கு சூர்யா, கார்த்தி தவிர்த்து மற்றவர்கள் அலர்‌ஜி. இவர்களில் ஒருவர்தான் நடித்தாக வேண்டும்.

சாந்தகுமாருக்கு கிடைக்கயிருப்பது சூர்யாவின் கால்ஷீட்டா இல்லை கார்த்தியின் கால்ஷீட்டா? சாந்தகுமாரைப் போல காத்திருக்க வேண்டியதுதான்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger