News Update :
Powered by Blogger.

கசாப் மரண தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

Penulis : karthik on Monday, 10 October 2011 | 03:40

Monday, 10 October 2011

 
 
 
26/11 தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபின் மரண தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
 
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் கடந்த மே மாதம் பாகிஸ்தான் தீவிரவாதியான அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கசாப் மும்பை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். அவனது மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. மும்பை உயர் நீதிமன்றமும் கசாபின் மரண தண்டனையை உறுதிசெய்தது.
 
இதையடுத்து கசாப் உச்ச நீதிமன்ற்ததில் மேல் முறையீடு செய்தான். அதற்காக தனது சார்பில் வாதாட ஒரு வழக்கறிஞரை நியமிக்குமாறு கசாப் இலவச சட்ட மையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினான். அதன்படி கசாப்பின் மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாதாட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் கசாபின் மனு நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கசாப் சார்பில் ராஜு ராமச்சந்திரன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதிகள் கசாபின் மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.



comments | | Read More...

மாறன் சகோதரர்கள் மீது எப்ஐஆர் பதிவு-தயாநிதியின் வீடுகள், அலுவலகம், சன் டிவி அலுவலகத்தில் சிபிஐ ரெய்

 

சென்னை: முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் சென்னை, டெல்லி, ஹைதராபாத் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக விற்க வைத்த விவகாரத்தில் தயாநிதி மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது சிபிஐ எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்துள்ளது.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில், மாறன் சகோதரர்கள் தவிர மேக்சிஸ் அதிபரான ஆனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் குழுமத்தைச் சேர்ந்த 'அஸ்ட்ரோ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது கிரிமினல் சதி வழக்கு பதிவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று தயாநிதி மாறனின் சென்னை போட் க்ளப் வீடு, சென்னை அலுவலகம், ஹைதராபாத்-டெல்லி வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

அதே போல சன் டிவி அலுவலகத்திலும் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இது தவிர மாறன் சகோதரர்களுக்கு மிக நெருக்கமான சிலரின் வீடுகளிலும் சோதனைகள் நடந்து வருகிறது.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவன அதிபராக இருந்த சிவசங்கரன் தனது செல்போன் சேவையை விரிவாக்க 2ஜி லைசென்ஸ் கோரி விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு லைசென்ஸ் தர மறுத்த தயாநிதி, அவரது நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்பந்தித்தார்.

இதையடுத்து வேறு வழியின்றி தனது நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு ஆனந்த கிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்றதாக சிபிஐயிடம் சிவசங்கரன் வாக்குமூலம் அளித்தார்.

இவ்வாறு ஏர்செல் பங்குகளில் பெரும்பாலானவை மேக்ஸிஸ் வசம் ஆன பின்னர், ஏர்செல் நிறுவனத்துக்கு தயாநிதி மாறன் 2ஜி லைசென்ஸ் ஒதுக்கினார். இதைத் தொடர்ந்து சன் டிவியின் டிடிஎச் சேவையில் மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரோ ரூ. 600 கோடியை முதலீடு செய்தது.

இது 2ஜி லைசென்சுக்காக மேக்ஸிஸ் தயாநிதி தரப்புக்கு தந்த லஞ்சம் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக ரால்ஃப் மார்ஷலிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது, அதற்குக் கைமாறாக மாறன் குடும்பத்தினருக்குச் சொந்தமான சன் டி.வி.யில் முதலீடு செய்தது உள்ளிட்டவை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மார்ஷல் விளக்கமளித்தாகக் கூறப்பட்டது.

comments | | Read More...

கோப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ்! * வீழ்ந்தது பெங்களூரு சாலஞ்சர்ஸ்

 

சென்னை: சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி "சூப்பராக' தட்டிச் சென்றது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியாவில் மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20′ தொடர் நடந்தது. நேற்றிரவு சென்னையில் நடந்த பைனலில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ்' வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்பஜன் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
வெட்டோரி ஜாலம்:
மும்பை அணி திணறல் துவக்கம் கண்டது. அவசரப்பட்ட பிலிஜார்டு(3) ரன் அவுட்டானார். நானஸ் "வேகத்தில்' கன்வர்(13) காலியானார். பின் பிராங்க்ளின், அம்பதி ராயுடு சேர்ந்து பொறுப்பாக ஆடினர். அரவிந்த் ஓவரில் பிராங்க்ளின் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பட்கல் பந்தில் ராயுடு(22) வெளியேறினார். தில்ஷன் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த யாதவ்(24), தேவையில்லாமல் ரன் அவுட்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பிராங்க்ளினும்(41) ரன் அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது. அடுத்து வந்தவர்கள் ஏமாற்ற, விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. போட்டியின் 16வது ஓவரை வீசிய வெட்டோரி இரட்டை "அடி' கொடுத்தார். முதல் பந்தில் "அதிரடி' போலார்டை(2) அவுட்டாக்கினார். 3வது பந்தில் ஹர்பஜனை(0) பெவிலியனுக்கு அனுப்பினார்.
மலிங்கா அதிரடி:
கடைசி கட்டத்தில் வெட்டோரி, அரவிந்த் பந்துகளை சிக்சருக்கு விரட்டிய மலிங்கா நம்பிக்கை தந்தார். ராஜூ பட்கல் வீசிய போட்டியின் 19வது ஓவரில் சதிஷ்(9), மலிங்கா(16) அவுட்டாக, ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. மும்பை அணி 20 ஓவரில் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
விக்கெட் மடமட:
போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு தில்ஷன் அதிரடி துவக்கம் தந்தார். அகமது ஓவரில் பவுண்டரிகளாக விளாசினார். இவர், மலிங்கா "வேகத்தில்' 27 ரன்களுக்கு அவுட்டானார். ஹர்பஜன் சுழலில் "ஆபத்தான' கெய்ல்(5) வெளியேற, மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இதற்கு பின் வந்தவர்கள் சேப்பாக்கம் ஆடுகளத்தின் மந்தமான தன்மையை உணர்ந்து விளையாட தவறினர். அதிரடியாக ஆட முற்பட்டு, விக்கெட்டுகளை வீணாக பறிகொடுத்தனர். அரியானாவை சேர்ந்த சாகல் "சுழலில்' அகர்வால்(14) சிக்கினார். பின் ஹர்பஜன் பந்தில் விராத் கோஹ்லி(11) அவுட்டாக, பெங்களூரு அணியின் நம்பிக்கை தகர்ந்தது. தொடர்ந்து அசத்திய சாகல் பந்தில் அருண் கார்த்திக் "டக்' அவுட்டானார். போலார்டு பந்தில் முகமது கைப்(3) வீழ்ந்தார். போராடிய சவுரப் திவாரி(17), அகமது பந்தில் அவுட்டானார். "டெயிலெண்டர்களும்' சொதப்ப, பெங்களூரு அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் தேடியது.
சுழலில் அசத்திய ஹர்பஜன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருதை மலிங்கா கைப்பற்றினார்.


ரூ. 12 கோடி பரிசு
சாம்பியன்ஸ் லீக் தொடரில், கோப்பை வென்ற "ரிலையன்ஸ்' முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 12 கோடி பரிசாக தட்டிச் சென்றது. இரண்டாம் இடம் பெற்ற தொழில் அதிபர் மல்லையாவின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி ரூ. 6 கோடி பரிசாக பெற்றது.
————–
சபாஷ் ஹர்பஜன்
சச்சின் இல்லாத நிலையில் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்திய ஹர்பஜன் மும்பை அணிக்கு கோப்பை வென்று தந்தார். பைனலில் சுழல் ஜாலம் காட்டிய இவர், 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger