News Update :
Powered by Blogger.

நிலநடுக்கத்திற்குப் பின் பாகிஸ்தான் அருகில் தோன்றியுள்ள 3 புதிய தீவுகள் Pakistan gets 3 new islands following earthquake

Penulis : Tamil on Friday, 27 September 2013 | 17:24

Friday, 27 September 2013

நிலநடுக்கத்திற்குப் பின் பாகிஸ்தான் அருகில் தோன்றியுள்ள 3 புதிய தீவுகள் Pakistan gets 3 new islands following earthquake
Tamil NewsYesterday, 05:30

புதுடெல்லி, செப். 27-

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலுசிஸ்தான் மாகாணத்தையே அந்த நிலநடுக்கம் புரட்டிப் போட்டது. இதன் தாக்கம் டெல்லி வரை உணரப்பட்டது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அடங்கியபோது க்வாடர் நகரத்தின் கடற்கரைப் பகுதியில் வாழும் மக்கள் ஒரு புதிய தீவு ஒன்று கடற்பரப்பில் தோன்றியுள்ளதைப் பார்க்க நேர்ந்தது. இந்தப் புதிய தீவு 600 அடி விட்டமும் 30 அடி உயரமும் உள்ளது என்று இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (டபிள்யூடபிள்யூஎப்) அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகரான முகமது மோசம் கான் தெரிவித்தார். கற்களும், மென்மையான மண்ணும் நிரம்பியுள்ள இந்தத் தீவின் மேற்பரப்பில் வாயு வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தவிர பலுசிஸ்தான் கடற்பகுதியிலும் இரண்டு புதிய தீவுகள் தோன்றியுள்ளன. ஒமாரா நகரின் அருகேயுள்ள இந்தத் தீவுகள் சிறியவை என்றும், 30-40 அடி விட்டமும், 2-3 அடி உயரமும் கொண்டவை இவை என்றும் கான் தெரிவித்தார். இந்தத் தீவுகளில் இருந்தும் வாயு வெளிவந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

இதுபோன்று தோன்றும் தீவுகளில் சில தீவுகள் அப்படியே நிலைத்து இருக்கும் என்றும் சில தீவுகள் காலப்போக்கில் மறைந்துவிடும் என்று கான் தெரிவித்தார். கடந்த 1945 ஆம் ஆண்டு அரை கி.மீ நீளத்தில் ஒன்றும், இரண்டு கி.மீ நீளத்தில் ஒன்றுமாக இரண்டு தீவுகள் தோன்றியதாகவும் அவர் கூறினார்.
...
Show commentsOpen link

comments | | Read More...

அவசர சட்டம் முட்டாள்தனமானது; கிழித்து எறியவேண்டும் ராகுல் காந்தி கருத்தால் பரபரப்பு Nonsense Ordinance Rahul Gandhi concept

அவசர சட்டம் முட்டாள்தனமானது; கிழித்து எறியவேண்டும் ராகுல் காந்தி கருத்தால் பரபரப்பு Nonsense Ordinance Rahul Gandhi concept

Tamil NewsToday, 05:30

புதுடெல்லி, செப். 27-

தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதில் இருந்து பாதுகாக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று பா.ஜனதா வலியுறுத்தியது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியிலும் எதிர்ப்பு உள்ளது. "எங்களில் பலர் இந்த அவசரச் சட்டத்தை எதிர்க்கிறோம். ஏன் இந்த அவசரம்?"  என்று கேள்வி எழுப்புகிறர் காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீக்சித். இதேபோல் மிலிந்த் தியோரா, திக்விஜய் சிங், பிரியா தத், அனில் சாஸ்திரி ஆகியோரும் அவசரமாக இந்த சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் அவர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வரும் அவசரச் சட்டம் முற்றிலும் தவறானது என்பது எனது தனிப்பட்ட கருத்து.  அவசரச் சட்டத்தை கிழித்து எறிய வேண்டும். இது அரசியல் முடிவாகும். ஒவ்வொரு கட்சியும் இதைத்தான் செய்கிறது. இந்த முட்டாள்தனமான காரியத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒவ்வொரு கட்சியும் தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு கட்சியிலும் தவறு இழைக்கப்படுகிறது. இந்த தவறை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் இது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவசரச் சட்டத்தை நியாயப்படுத்தி மத்திய சட்ட மந்திரி கபில் சிபல் பேட்டி அளித்த பிறகு ராகுல் காந்தி இவ்வாறு கூறியிருப்பது அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது.

கட்சியின் நிலைப்பாட்டை ராகுல் காந்தி தெளிவுபடுத்தியிருப்பதாகவும், அவசர சட்டத்தை ராகுல் எதிர்த்தால் காங்கிரசும் எதிர்க்கும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் எம்.பி. கூறினார்.

அவசர சட்டம் தொடர்பாக உள்துறை மந்திரி ஷிண்டே, சட்டத்துறை மந்திரி கபில் சிபல் உள்ளிட்ட மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் அக்கறை காட்டாத நிலையில், அவசர சட்டம் வாபஸ் பெறப்படலாம் எனத் தெரிகிறது.
...
Show commentsOpen link

comments | | Read More...

போலியான பிறப்புறுப்பில் சிறுநீரை நிரப்பி பரிசோதனைக்கு வழங்கிய ஓட்ட வீரர் sports news

போலியான பிறப்புறுப்பில் சிறுநீரை நிரப்பி பரிசோதனைக்கு வழங்கிய ஓட்ட வீரர்
by Marikumar

விளை­யாட்டில் ஈடு­ப­டு­ப­வர்கள் போதை மருந்­து­களை உப­யோ­கித்­துள்­ளார்­களா என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் சிறுநீர் பரி­சோ­த­னைக்­காக போலி பிறப்­பு­றுப்­பொன்றில் நிரப்­பப்­பட்ட சிறு­நீரை வழங்­கிய இத்­தா­லிய நெடுந்­தூர ஓட்ட வீரர் ஒருவர் ஒழுங்­கீன நடத்­தையில் ஈடு­பட்­ட­தாக குற்­றச்­சாட்டை எதிர்­கொண்­டுள்ளார்.

டேவிஸ் லிக்­சி­யார்டி (27 வயது) என்ற மேற்­படி நபர், நிஜ பிறப்­பு­றுப்பைப் போன்ற தோற்­றத்தைக் கொண்ட போலி பிறப்­பு­றுப்பில் குழந்­தை­யொன்றின் சிறு­நீரை நிரப்பி தனது சொந்த சிறுநீர் போன்று பரிசோதனையின் போது வழங்கி யுள்ளார்.

மேற்படி 10 கிலோமீற்றர் ஓட்டப்போட்­டியில் பங்­கேற்ற இத்­தா­லிய விமா­னப்­ப­டைக்­ கு­ழுவில் அங்கம் வகித்த டேவிஸின் ஏமாற்று நட­வ­டிக்­கையை அவ­ரது அதி­கா­ரிகள் கண்­ட­றிந்­த­தை­ய­டுத்து அவர் தீவிர விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

செயற்கை பிறப்­பு­றுப்­புடன் இணைக்­கப்­பட்ட விசேட பையில் சிறுநீரை நிரப்பி அதனை சிறிய கரு­வியின் மூலம் லேசாக வெப்­ப­மூட்டி செயற்கை பிறப்­பு­றுப்­பி­னூ­டாக வெளியேற்றி புதிதாக சிறுநீர் கழிப்பதை போன்ற தோற்றப்பாட்டை அவர் ஏற்படுத்தியிருந்தார்.
Share |

Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger