News Update :
Powered by Blogger.

ஆணாக நடித்து 15 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்த 21 வயது பெண்! Tamil sex news

Penulis : Tamil on Wednesday, 25 September 2013 | 07:45

Wednesday, 25 September 2013

ஆணாக நடித்து 15 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்த 21 வயது பெண்! (படம் இணைப்பு)

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

ஆணாக நடித்து 15 வயது சிறுமியுடன் பாலியல் தொடர்பை பேணிவந்த 21 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அமெரிக்காவின் York-Poquoson பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அப் பகுதியில் உள்ள அடர்ந்த புதர் வழியே பாதசாரி ஒருவர் பயணித்த வேளை, அப் புதரினுள் சிறுமியின் அனுங்கல் சத்தம் கேட்டதால் அது தொடர்பில் பொலீசாருக்கு தகவல் அளித்தார்.

பொலீசார் விரைந்து, அப் புதர் பகுதியை ஆராய்ந்தபோது, அங்கே சிறுமி ஒருவருடன் இளைஞன் ஒருவர் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருந்தமை ஆதாரத்துடன் பிடிக்கப்பட்டது.

குறித்த இளைஞனை கைது செய்து விசாரணை நடத்திய போது, அது ஆண் இல்லை, பெண் என்பது தெரிய வந்தது.

மைனர் சிறுமியை பலாத்காரம் செய்தமை தொடர்பில் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Show commentsOpen link

comments | | Read More...

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த பூகம்பம்: வீடுகள் இடிந்து விழுந்து 50 பேர் பலி Powerful earthquake strikes Balochistan

Penulis : Tamil on Tuesday, 24 September 2013 | 09:53

Tuesday, 24 September 2013

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த பூகம்பம்: வீடுகள் இடிந்து விழுந்து 50 பேர் பலி Powerful earthquake strikes Balochistan
Tamil NewsToday, 05:30

பலூசிஸ்தான், செப். 24-

பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியிலுள்ள பலூசிஸ்தான் மாகாணம் பூகம்பத்தினால் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதியாகும். இப்பகுதியில் இந்தியன் தட்டும், யுரேசிய தட்டும் சந்திக்கிறது. இந்த இரண்டு தட்டுகளில் ஒன்று நகர்கிற போது அதன் தாக்கம் பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கமாக வெளிப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில் பலூசிஸ்தான் மாகாணத்தின் குஸ்தர் மற்றும் அவாரன் பகுதியில் இன்று மாலை கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவான இந்த பூகம்பத்திற்கு அப்பகுதிகளில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இரவு 8 மணி நிலவரப்படி சுமார் 50 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மிகப்பெரிய பலூசிஸ்தான் மாகாணத்தில் குறைந்த அளவே மக்கள் தொகை உள்ளது குறிப்பிடத்தக்கது.  இங்குள்ள தல்பாண்டியன் பகுதியிலிருந்து 145 கிலோ மீட்டர் தென்கிழக்கே 23 கிலோ மீட்டர் ஆழத்தில் இதன் பூகம்ப மையம் கொண்டிருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடுமையான இந்த பூகம்பத்திற்கு மிகப்பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்த பூகம்பத்தால் கராச்சி மற்றும் ஐதராபாத் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

மேலும் இப்பூகம்பத்தின் தாக்கம் டெல்லி, அரியானா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் உணரப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் பலூசிஸ்தான் எல்லையோரமாக ஈரானில் 7.8 அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. இதில் பலூசிஸ்தான் மாகாணத்தில் 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

comments | | Read More...

16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜாமினில் விடுதலை Jagan Mohan Reddy freed on bail

Penulis : Tamil on Monday, 23 September 2013 | 06:22

Monday, 23 September 2013

16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜாமினில் விடுதலை Jagan Mohan Reddy freed on bail
Tamil NewsToday, 05:30

ஐதராபாத், செப். 23-

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சிலருக்கு எதிராக 10 குற்றப்பத்திரிக்கைகள் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இதில் 5 வழக்குகள் இந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்டவையாகும்.

முன்பு ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டி முதல் அமைச்சராக இருந்தபோது, ஆட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி ஜெகன் மோகனின் கம்பெனி மற்றும் தனியார் நிறுவனங்களில் அவர் முதலீடுகள் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

ஜெகன் மோகன் ரெட்டியின் மீதான குற்றப்பத்திரிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பின் அவர் ஜாமின் கோரி விண்ணபிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது.

இந்நிலையில் குற்றப்பத்திரிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமின் மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவரது மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, 2 லட்சம் ரூபாய் ரொக்க ஜாமீனில் ஜாமின் வழங்குவதாக தீர்ப்பளித்தார். மேலும், அவர் ஐதராபாத்தை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இதனால், ஐதராபாத் சஞ்சல்குடா சிறையில் 16 மாத சிறைவாசத்துக்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜாமினில் விடுதலையானர். 
...
Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger