News Update :
Powered by Blogger.

மதுரை மாணவி நந்தினி நள்ளிரவில் கைது

Penulis : Tamil on Thursday, 1 August 2013 | 00:04

Thursday, 1 August 2013

மதுவிலக்கு கோரி கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி உள்பட 6 பேரை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூரண மதுவிலக்கு கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கல்லூரி முன்பு கடந்த 29–ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவருக்கு சட்டக்கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் அன்று இரவு 7 மணிக்கு போலீசார் நந்தினியை கைது செய்து விடுவித்தனர். அதன் பிறகு இரவு 10.30 மணிக்கு சட்டக்கல்லூரி வந்த நந்தினி மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
comments | | Read More...

இந்தியாவை காக்க மோடி பிரதமராக வரவேண்டும்

Penulis : Tamil on Monday, 29 July 2013 | 18:24

Monday, 29 July 2013

சாத்தான்குளம் ஒன்றிய
இந்து முன்னணி சார்பில்
இந்து முன்னணி மாநாடு நடந்தது.
மேலசாத்தான்குளம் முத்தாரம்மன் கோவில்
வளாகத்தில் நடந்த மாநாட்டிற்கு மாநில
தலைவர் டாக்டர்
அரசு ராஜா தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட
துணை தலைவர்கள் சுந்தரவேல்,
பொன்.பரமேஸ்வரன், மாவட்ட
செயற்குழு உறுப்பினர்கள் சின்னத்துரை,
சுடலைமுத்து, பொன்கந்தசாமி,
தெற்கு ஒன்றிய தலைவர் சுயம்பு, ஒன்றிய
தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர்கள்
பாலகிருஷ்ணன், பொன்பாண்டி, ஒன்றிய
செயற்குழு உறுப்பினர் மலையாண்டி, நகர
தலைவர் சரவண மயில் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். மாநாட்டில் மாநில
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
ராமகோபாலன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:–
இந்திய எல்லையில் சீனா வாலாட்டுகிறது.
ஆனால் நமது பிரதமர் கண்டனம் மட்டும்
செய்கிறார்.
அதனை சீனா கண்டுகொள்ளவில்லை.
அதனை நம்மால் தடுக்க முடியும். அந்த
தடுக்கும் சக்தி தான் நரேந்திரமோடி. இவர்
நாட்டில் பிரதமராக வரத்தான் போகிறார்.
மோடி போன்ற இரும்பு மனிதர் பிரதமராக
வரவேண்டும், நாட்டை காப்பாற்ற வேண்டும்
என மக்கள் விரும்புகிறார்கள்.
இன்று கடவுளே கிடையாது என்பவர்கள்
திருப்பதி, பழனி கோவில்களில்
திருட்டுத்தனமாக
சாமி கும்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு மிகப்பெரிய எதிரி தீண்டாமை,
சாதி சண்டை தான். இதனை ஒடுக்க நாம்
ஒன்றுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் மாநில தலைவர் டாக்டர்
அரசுராஜா, மாநில துணை தலைவர்
வி.பி.ஜெயக்குமார், மாவட்ட பொதுச்
செயலாளர் சக்திவேல் உள்பட பலர் பேசினர்.
முன்னதாக புளியடி மாரியம்மன் கோவிலில்
இருந்து இந்து முன்னணியினர் ஊர்வலமாக
வந்தனர். ஊர்வலத்தை மாநில
துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார்
கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் சென்றவர்கள் இந்து மாணவ–
மாணவிகளுக்கும்
கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என
கோஷம் எழுப்பினர்.

comments | | Read More...

இளவரசன் மரணம் திவ்யாவை மீட்க கோரி கொடுத்த மனு தள்ளுபடி

Penulis : Tamil on Friday, 26 July 2013 | 03:57

Friday, 26 July 2013

தர்மபுரி இளவரசன் – திவ்யா காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடந்த நவம்பர் 7–ந் தேதி கலவரம் நடந்தது. இதில் பல வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பலர் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே திவ்யா தாயார் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து திவ்யா கடத்தப்பட்டிருப்பதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் சுந்தரேஸ் முன்பு கடந்த 3–ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜரான திவ்யா தனது தாயாருடன் செல்வதாக கூறினார். இந்த நிலையில் மறுநாள் இளவரசன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேன்மொழியின் வக்கீல் ரூபட்பர்னபாஸ் ஆஜராகி, இளவரசன் இறந்து விட்டதால் தற்போது திவ்யா தயாருடன் வசித்து வருகிறார். எனவே, நாங்கள் தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்றார்.
அப்போது இளவரசன் வக்கீல் ரஜினிகாந்த் கூறுகையில், இளவரசன் மரணம் உள்பட பல்வேறு சம்பவங்கள் நடந்து விட்டதால் இவற்றையும் கோர்ட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
இரு தரப்பு கருத்துக்களை கேட்ட நீதிபதிகள் திவ்யாவை மீட்க கோரி தேன்மொழி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger