News Update :
Powered by Blogger.

மு‌ள்‌ளிவா‌ய்‌க்கா‌ல் போ‌ல் அனைவ‌ரையு‌ம் கொ‌ல்ல காவல்துறை திட்டம் – உதயகுமார் திடுக்கிடும் தகவல்

Penulis : karthik on Wednesday, 21 March 2012 | 01:24

Wednesday, 21 March 2012

 

நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் இடி‌ந்தகரை‌யி‌ல் மு‌ள்‌ளிவா‌ய்‌க்கா‌ல் ஆபரேஷ‌ன் போ‌ல் அனைவ‌ரையு‌ம் கொ‌ல்ல காவல்துறை ‌தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ப்பதாக கூட‌ங்குள‌ம் அணுஉலை எ‌தி‌ர்‌ப்பு‌ குழு ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் உதயகுமா‌ர் ப‌கீ‌ர் தகவலை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர்.

இடி‌ந்தகரை‌யி‌ல் உ‌ள்ள லூ‌ர்து மாதா ஆலய‌த்‌தி‌ல் 10 ‌கிராம ம‌க்களுட‌ன் உதயகுமா‌ர், பு‌‌ஷ்பராய‌ன் ஆ‌கியோ‌ர் இ‌ன்று 3வது நாளாக சாகு‌ம்வரை உ‌ண்ணா‌விர‌த‌ம் இரு‌‌ந்து வரு‌கி‌ன்றன‌ர்.

அ‌‌ப்போது செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய அவ‌ர், ‌‌தீ‌விரவா‌திக‌ள் கூ‌ட்ட‌‌த்தை போ‌ல் எ‌ங்க‌ளை ‌ம‌த்‌திய, மா‌நில அரசுக‌ள் ‌பிடி‌த்து வை‌த்து‌ள்ளதாக கூ‌றினா‌ர்.

இடி‌ந்தகரை‌யி‌‌ல் மு‌ள்‌ளிவா‌‌ய்‌க்கா‌ல் ஆபரேஷ‌ன் நட‌த்த காவல்துறை ‌தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ப்பதாகவு‌ம் உதயகுமா‌ர் ப‌கீ‌ர் தகவலை தெ‌ரி‌வி‌த்த‌ா‌ர்.

‌மி‌ன்சார‌ம், கு‌டி‌நீ‌ர் உ‌ள்‌ளி‌ட்டவை து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், சுகாதார வச‌‌தி‌யி‌ன்‌றி ம‌க்க‌ள் த‌வி‌த்து வருவதாகவு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

கா‌ய்க‌றி, பா‌ல் உ‌ள்‌ளி‌ட்ட அ‌‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்க‌ள் கொ‌ண்டு வரு‌ம் வாகன‌ங்களை போ‌லீ‌ஸ் தடு‌த்து‌வி‌ட்டதாக கூ‌றிய உதயகுமா‌ர், செ‌ல்போ‌ன் இணை‌ப்புகளையு‌ம் து‌ண்டி‌‌க்க போ‌லீ‌‌ஸ் ‌தி‌ட்ட‌‌மி‌ட்டு‌ள்ளதாகவு‌ம் தெ‌ரிவ‌ி‌‌த்தா‌ர்.

எ‌ங்களை ச‌ந்‌தி‌க்க வ‌ந்த வழ‌க்க‌றிஞ‌ர்களை காவல்துறை தடு‌த்து‌வி‌ட்டதாகவு‌ம், செ‌ய்‌தியாள‌ர்களை உ‌ள்ளே ‌விட அனும‌தி‌க்க‌ப்படுவ‌தி‌ல்லை எ‌ன்று‌ம் உதயகுமா‌ர் கூ‌றினா‌ர்.

த‌மிழக‌த்‌தி‌ல் நட‌ப்பது அரசா‌ங்கமா? அ‌ல்லது பா‌சிச ஆ‌ட்‌சியா எ‌ன்று உதயகுமா‌ர் ‌வினா எழு‌ப்‌பினா‌ர்.

ம‌க்களு‌க்கு பய‌த்தையு‌ம், ‌பீ‌தியையு‌ம் காவல்துறை ஏ‌ற்படு‌த்துவதாகவு‌ம், இது முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌‌லிதாவு‌க்கு தெ‌ரியுமா எ‌ன்று‌ம் அவ‌ர் கே‌‌ள்‌‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

‌எ‌ன்னுடைய ப‌ள்‌ளியை 50 பே‌ர் கொ‌ண்ட கு‌ம்ப‌ல் அடி‌த்து நொ‌று‌க்‌கியு‌ள்ளதாகவு‌‌ம், ப‌ள்‌ளியையே அடி‌‌த்து நொறு‌க்கு‌ம் அரசா‌ங்க‌ம், எ‌ப்படி, படி‌க்கு‌ம் குழ‌ந்தைகளை பாதுகா‌‌க்க முடியு‌ம் எ‌ன்று உதயகுமா‌ர் ‌வினா எழு‌ப்‌பினா‌ர்.

நா‌‌ங்க‌ள் யாரு‌ம் த‌னியாக வர மா‌ட்டோ‌ம், அனைவரு‌ம் கைதாக தயாராக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

comments | | Read More...

தயாநிதியை தொடர்ந்து கலாநிதி மாறனின் நிதி ஆவணங்கள் அமலாக்கப் பிரிவில் தாக்கல்

 
 
 
ஸ்பெக்ட்ரம் லைசென்சு ஒதுக்கீடு தொடர்பான மேக்சிஸ்-ஏர்செல் ஒப்பந்தத்தில் ரூ.555 கோடி ஊழல் நடந்ததாக, தொலைத்தொடர்பு துறை முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் மற்றும் அவருடைய சகோதரரும், சன் டி.வி. நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் இருவருக்கும் மத்திய அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது.
 
அதன்பேரில், தயாநிதி மாறன் தொடர்புடைய பண பரிமாற்றம், முதலீடுகள் மற்றும் இதர வர்த்தகம் தொடர்புடைய நிதி ஆவணங்கள் டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல், கலாநிதி மாறன் சார்பிலும் நிதி ஆவணங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
 
தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு துறை மந்திரியாக பணிபுரிந்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் மத்திய மந்திரி பதவியில் இருந்து தயாநிதி மாறன் விலகினார். இந்த குற்றச்சாட்டை தயாநிதி மாறன் மறுத்து வருகிறார். இந்த வழக்கில் தயாநிதி மாறனுடன் தொடர்புடைய மேலும் சிலருடைய வாக்குமூலங்களையும் அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ.யும் இந்த முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.



comments | | Read More...

இலங்கை போரின்போது உண்ணாவிரதம் இருந்தது கபட நாடகமா?: கருணாநிதி பதில்

 
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா என்னதான் முதலமைச்சர் பதவியிலே அமர்ந்திருந்தாலும், அவரது நினைவெல்லாம் நிறைந்திருப்பது தி.மு.க. மீதுதான். அது சங்கரன்கோவில் இடைத்தேர்தலாக இருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையாக இருந்தாலும் தி.மு.க. வையும், என்னையும் கடுமையாகத் தாக்கி, அதை 'கபட நாடகம்' என்று வர்ணிக்காமல் அவரால் இருக்க முடியாது.
 
இலங்கை ராணுவத்தால் நமது இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக மத்திய அரசு அதிலே தாமதமின்றித் தலையிட்டு போர் நிறுத்தம் செய்திட வேண்டுமென்று கேட்டு, நான் விடியற்காலை 5.45 மணியளவில் கட்சிக்காரர்களோ, உதவியாளர்களோ கூட உடன்வராத நிலையில் தனியாக அண்ணா நினைவிடம் சென்று உண்ணாவிரதம் தொடங்கியதை பின்னர் அங்கே வந்த செய்தியாளர்கள் எல்லாம் அறிவார்கள்.
 
நான் அங்கே உண்ணாவிரதம் இருக்கும் செய்தி வெளியே தெரிய ஆரம்பித்த பிறகுதான் அதிகாரிகளும், கழகத்தோழர்களும் அங்கே வந்தார்கள். அதன் பின்னர்தான் நான் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி டெல்லி வரை சென்று, மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும், பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கும், சோனியாகாந்தியும் தலையிட்டு என்னிடம் இலங்கையிலே உள்ள நிலை குறித்து விளக்கி என் உடல் நிலை கருதி உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
 
அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 27-4-2009 அன்று நான் உண்ணாவிரதம் இருந்தபோது விடுத்த அறிக்கையில், ''போர் நடவடிக்கைகள் முற்றுப்பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்கு கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள், இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
 
குடிமக்களை மீட்பதற்கும் அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்பு படைகள் இனி கவனம் செலுத்தும். போர் முனையில் சிக்கிக்கொண்டுள்ள தமிழ்க் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளே முதன்மையானவையாகும். அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல்படியாகும்'' என்று தெரிவித்ததையொட்டித்தான் அன்று பிற்பகலில் எனது உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றேன்.
 
இப்போதும் அமெரிக்க தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க முன் வரவில்லை என்றால், தி.மு.க.வினர் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றும், அதிலே நானும் பங்கேற்பேன் என்றும் அறிவித்தேன். மத்திய அமைச்சரவையிலிருந்தே தி.மு.க. அமைச்சர்கள் விலகுவார்கள் என்றும் தீர்மானம் எழுதி உயர்நிலைச் செயல் திட்டக்குழுவிலே நிறைவேற்றுவதாக இருந்தேன். ஆனால் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு என்ன செய்தார்?
 
தி.மு.க. ஆட்சி பொறுப்பிலே இருந்தபோது, பிரதமருக்கு நான் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? நேரிலே சென்று பிரதமரிடம் எடுத்துக்கூற வேண்டாமா என்று எத்தனை அறிக்கைகளிலே ஜெயலலிதா என் மீது தாக்குதல் தொடுத்தார்?.
 
தற்போது ஏன் ஜெயலலிதா, முக்கியமான பிரச்சினைகளிலே கூட முதலமைச்சர் என்ற முறையிலே டெல்லி சென்று பிரதமரிடம் முறையிடவில்லை? அதற்கு மாறாக பிரதமரே கருணாநிதியின் கபட நாடகத்திற்கு துணை போகின்ற அளவிற்கு நடந்து கொள்கிறார் என்று அவதூறு அறிக்கை விடுகிறார் என்றால் அது நாடாளுமன்ற நடவடிக்கைகளையே அவமதிக்கின்ற செயலாகும்.
பிரதமர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை இந்திய அரசு ஆதரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பாக கழக உயர்நிலை செயல் திட்டக்குழு கூடும் என்பதும், மாநில அளவில் தி.மு. கழகம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் என்பதும், அதிலே நான் பங்கேற்பதும் செய்தியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது.
 
ஆனால் தற்போது, பாரதப் பிரதமர் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூறியதை வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நான் கைவிட்டு விட்டேன் என்கிறார் ஜெயலலிதா. பிரதமரின் பேச்சின்போது தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏன் அ.தி.மு.க. வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட வரவேற்று மேசையைத் தட்டியதை தொலைக்காட்சியிலேயே காட்டினார்கள்.
 
பழ. நெடுமாறன் போன்றவர்கள் தமிழகம் முழுவதும் 23-ம் தேதி நடத்த விருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கூட திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மட்டும் பிரதமர் தெளிவற்ற பதிலைக்கூறியதாக அறிக்கை விடுத்துள்ளார். அது வருத்தத்திற்குரியது என்று கூறியதோடு, தேவையில்லாமல் நான் ஏதோ துரோகம் இழைத்து விட்டதாகவும், கபட நாடகத்தை அரங்கேற்றாமல் இருக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா சாடியிருப்பது தமிழக மக்களை திசை திருப்ப முயற்சிப்பதை எடுத்துக்காட்டுகிறது.
 
அதுபோலவே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படும் என்ற முடிவினையும் ஜெயலலிதா எடுத்துள்ளார். கூடங்குளம் கடந்த ஆறு மாதங்களாக மூடிக்கிடக்க யார் காரணம்? போராட்டக்குழுவினரை ஜெயலலிதா அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கையை ஏற்று 22-9-2011 அன்று நடைபெற்ற அமைச்சரவையிலே கூடங்குளம் அணு நிலைய பணிகளை நிறுத்திவைக்குமாறு பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதால் தானே கடந்த ஆறு மாதமாக அந்த அணுமின் நிலையம் மூடப்பட்டு, தமிழகத்திலே வரலாறு காணாத அளவிற்கு மின்சாரப் பற்றாக்குறையும் ஏற்பட்டு, இருள்சூடி நந்ததோடு, கடந்த ஆறுமாத காலமாக அந்த கூடங்குளம் நிலையம் மூடப்பட்டு அலுவலர்களுக்கெல்லாம் பணியே இல்லாமல் ஊதியம் கொடுத்த அளவிலே மட்டும் 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படக் காரணம் யார்? அது மாத்திரமல்ல, போராட்டக்காரர்களை சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசே ஊக்கம் கொடுத்த காரணத்தால், அப்பாவிப் பொதுமக்கள் ஏமாந்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை கூடங்குளம் பகுதி மக்கள்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.
 
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger