News Update :
Powered by Blogger.

வசந்தபாலன் இயக்கத்தில் கார்த்தி

Penulis : karthik on Thursday, 1 March 2012 | 22:20

Thursday, 1 March 2012

 


அரவான் படத்தை தொடர்ந்து வசந்தபாலன் அடுத்து இயக்க போகும் படத்தில் பருத்திவீரன் கார்த்தி நடிக்க போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இதுநாள் வரை கமர்ஷியலாக நடித்து வந்த கார்த்திக்கு, இப்போது சிரீயஸ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறதாம்.

ஆனால் தனக்கு ஏற்றபடி யார் கதை தருவார் என்று யோசித்த போது அவர் நினைவில் தோன்றியவர் வசந்தபாலன் தானாம். உடனே அவரை சந்தித்து உங்க கம்பினேஷனில் எனக்கு ஒரு படம் பண்ணுங்க என்றாராம். அதுவும் உங்க ஸ்டைலி‌லேயே இருக்கட்டும், எனக்காக ‌எதையும் மாற்றாதீங்க என்று கோரிக்கையும் வைத்தாராம். இந்த பேச்சுவார்த்தையில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், அநேகமாக வசந்தபாலனின் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.
comments | | Read More...

சினிமாவில் திருப்தியே வரக்கூடாது - ஸ்ருதிஹாசன்



சினிமாவில் திருப்தியே வரக்கூடாது, அப்படி வந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதி, இப்போது தமிழில் ‌தனுஷ் உடன் 3 படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

சினிமா அனுபவம் குறித்து நடிகை ஸ்ருதி கூறியுள்ளதாவது, நான் கமல் மகளாக இருந்ததால் சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு ஈஸியாக கிடைத்தது. ஆனால் அது நிரந்தரம் கிடையாது. சினிமாவில் நீடிக்க திறமை வேண்டும். திறமை இருந்தால் தான் ஜெயிக்க முடியும். மேலும் சினிமாவில் திருப்தியே வரக்கூடாது. அப்படி வந்துவிட்டால் முன்னேற முடியாது என்றார். மேலும் தன்னை எல்லோரும் கமல் மகளாகத்தான் பார்க்கீறார்கள். அதை மாற்ற தொடர்ந்து முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
comments | | Read More...

தம் அடிக்கும் அவன் இவன் நடிகை

 

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நாயகி மதுஷாலினி, புகைப்பிடித்தல் காட்சியில் நடித்துள்ளார் இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்த மதுஷாலினி, ராம் கோபால் வர்மா இயக்கும்டிபார்ட்மென்ட் படத்துக்காக புகை பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று கனவு கண்டேன். அது இப்போது நிஜமாகியுள்ளது.ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமிதாப்பும் இப்படத்தில் நடிக்கிறார் என்பதால் எனக்கு இரட்டிப்பு சந்தோசம் என்று மதுஷாலினி கூறியுள்ளார்.

டிபார்ட்மென்ட் படத்தில் என்ற பெண் தாதாவாக நடித்துள்ளேன். திறமையை நிரூபிக்கக் கூடிய கதாப்பாத்திரம் என்று கூறலாம்.படத்தின் கதைப்படி நான் சிகரெட் பிடிக்கிற மாதிரி காட்சி உள்ளது. நானும் என்னுடைய கதாப்பாத்திரத்திற்காக புகை பிடித்தேன்.சண்டைக்காட்சிகள் எதிலும் போலியாக நடிக்க வில்லை. நான் நடித்த சண்டைக் காட்சிகளைப் பார்த்து என்னுடைய நண்பர்கள் அதிர்ச்சியானார்கள் என்று மதுஷாலினி கூறியுள்ளார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger