News Update :
Powered by Blogger.

2-வது மனைவியாக அனன்யா சம்மதம்

Penulis : karthik on Wednesday, 15 February 2012 | 04:06

Wednesday, 15 February 2012

 
 
 
நடிகை அனன்யாவுக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அனன்யா நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக "சீடன்" மற்றும் "எங்கேயும் எப்போதும்" படங்களிலும் நடித்துள்ளார்.
 
ஆஞ்சநேயன் அனன்யாவை விட வயது அதிகமானவர். ஆனாலும் கேரளாவில் பெரும் பணக்காரராக உள்ளார். திருமணத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. இதற்கிடையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 2008-ல் அவருக்கு திருமணம் நடந்ததாக கூறப்பட்டது.
 
முதல் திருமணத்தை மறைத்து மோசடியாக அனன்னாவை 2-வது திருமணம் செய்ய முயற்சித்ததாக பெற்றோர் ஆவேசமடைந்துள்ளனர். ஆஞ்சநேயன் மீது அனன்யாவின் தந்தை பெரும்பாபவூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் ஆஞ்சநேயனுக்கு 2-வது மனைவியாக அனன்யா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நிச்சயதார்த்தத்துக்கு முன்பே ஏற்கனவே திருமணம் ஆனதையும் முதல் மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அனன்யாவிடம் ஆஞ்சநேயன் தெரிவித்து விட்டாராம். அனன்யா பெற்றோரிடம் மட்டும் சொல்லாமல் மறைத்து விட்டாராம்.
 
இதனால் தற்போது எழுந்துள்ள சர்ச்சையை அனன்யா பொருட்டாக மதிக்கவில்லை. ஆனால் பெற்றோர் திருமணத்துக்கு தடை போட்டுள்ளனர். அனன்யா வெளியேறி விடாமல் இருக்க வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.



comments | | Read More...

சிகிச்சைக்காக மொட்டை புதிய தோற்றத்தில் யுவராஜ் சிங்!(வீடியோ,போட்டோ )

 
 


அமெரிக்காவில் நுரையீரல் கட்டிக்காக சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான யுவராஜ்சிங் தாம் நலமுடன் இருப்பதாக சமூக வலைதளமான டுவிட்டரிப் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் தலைமுடி இல்லாத தற்போதைய தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் டுவிட்டரில் யுவராஜ்சிங் வெளியிட்டுள்ளார்.

டுவிட்டரில்" கடைசியாக முடிதான் போச்சு! நான் நல்லா இருக்கேன்! யுவ்வலுவாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ்சிங் தற்போது பாஸ்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரில், தாம் முன்னைவிட வலுவாக திரும்பி களத்துக்கு வருவேன். ஏனெனில் என்னுடைய நாடே எனக்காக பிரார்த்திக்கிறது! என்னுடைய தனிமையை மதித்து ஆதரித்து வரும் ஊடகங்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.

30 வயதாகும் யுவராஜ்சிங் இதுவரை 37 டெஸ்ட் போட்டிகலில் விளையாடி 1775 ரன்களைக் குவித்துள்ளார்.
274 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8051 ரன்களை எடுத்துள்ளார்.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் மிக அபாரமாக ஆடியவர் யுவராஜ்சிங்.

யுவராஜுக்கு முதலில் நுரையீரல் புற்றுநோய் என்று சொல்லப்பட்டது. பின்னர் அவரது மருத்துவர்கள் நுரையீரலில் கட்டிதான் அது புற்றுநோய் அல்ல என விளக்கம் அளித்திருந்தனர்.







comments | | Read More...

விழா மேடையில் அமைச்சர் மரணம்

 
 
 
கல்லூரி நிகழ்ச்சியின்போது மேடையில் மயங்கி விழுந்த கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா மரணம் அடைந்தார்.
 
கர்நாடக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா (71). அவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இன்று காலை மங்களூரில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக நிருபதுங்கா ரோட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்றார்.
 
அங்கு ந்டநத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் திடீர் என்று மேடையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மல்லிகே மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு சாந்தா என்ற மனைவியும், 4 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர்.
 
நேர்மையானவர் என்று பெயரெடுத்த ஆச்சார்யா கர்நாடக உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருக்கையில் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டபோது பாஜக மூத்த தலைவரான ஆச்சார்யா 19 மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger