News Update :
Powered by Blogger.

Vettai postponed to Pongal

Penulis : karthik on Wednesday, 16 November 2011 | 02:47

Wednesday, 16 November 2011

Arya,Madhavan,Amala Paul and Sameera Reddy starrer Vettai which was scheduled for a Christmas release will now join the Pongal Race along with biggies like Vijay's Nanban , Karthi's Saguni and Dhanush's3. UTV Motion Pictures and Linguswamy's Thirupathi Brothers join ventured movie Vettai is a multistarrer that features Arya, Madhavan , Amala Paul and Sameera Reddy in lead roles . Vettai brings Madhavan to Kollywood after a brief break which is directed by Linguswamy. The team was hoping for a Christmas release but due to post productions works and non availability of good screens has forced the makers to push the movie for Pongal.

comments | | Read More...

கலைஞர் டிவியின் சொத்துக்கள் முடக்கப்படுகிறது.

 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டிவியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate) முடிவு செய்துள்ளது.
 
2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறைகேடாகப் பெற்ற டி.பி. ரியாலிட்டி உரிமையாளர் ஷாகித் ஹுசேன் பல்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் (இப்போது இதன் பெயர் Etisalat DB) தனது துணை நிறுவனமான குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் பிலிம்ஸ் ஆகியவை மூலமாக கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடியை வழங்கியது.
 
முதலில் இந்தப் பணம் டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திலிருந்து குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஷாகித் ஹுசேன் பல்வாவின் சகோததர் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோர்.
 
இந்தப் பணம் அங்கிருந்து படத் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் சினியுக் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்தப் பணம் கலைஞர் டிவிக்கு வந்து சேர்ந்தது.
 
கடந்த 2008-2010ம் ஆண்டுகளில் 33 தவணைகளில் இந்தப் பணம் கலைஞர் டிவிக்கு வந்து சேர்ந்தது.
 
ஆனால், இதை சினியுக் தங்களுக்கு கடனாகவே வழங்கியதாகவும், அதை வட்டியோடு சேர்த்து ரூ. 214 கோடியாகத் திருப்பித் தந்துவிட்டதாக கலைஞர் டிவி கூறுவதை சிபிஐ ஏற்கவில்லை. 2ஜி விவகாரம் வெடித்தவுடன், பிரச்சனையிலிருந்து தப்புவதற்காகத் தான் இதை கலைஞர் டிவி கடன் போல காட்டுவதாக சிபிஐ கூறுகிறது. இந்த விவகாரத்தில் தான் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந் நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் (Prevention of Money Laundering Act-PMLA) இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க களமிறங்கியது அமலாக்கப் பிரிவு.
 
முதல்கட்டமாக கலைஞர் டிவிக்கு பணத்தைத் தந்த ஷாகித் ஹுசேன் பல்வாவுக்கு சொந்தமான டைனமிக்ஸ் ரியாலிட்டி உள்ளிட்ட 4 நிறுவனங்களின் ரூ. 233.55 கோடி சொத்துக்களை முடக்க கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கப் பிரிவு உத்தரவு பிறப்பித்தது.
 
இந் நிலையில் இப்போது கலைஞர் டிவி, குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் ஆகிய நிறுவனங்களின் ரூ. 13.5 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு அடுத்த உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளது.
 
இந்த உத்தரவின்படி 3 நிறுவனங்களின் அசையும்- அசையா சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவை முடக்கப்படவுள்ளன. சட்டவிரோத பண பரிமாற்ற சட்டப் பிரிவு 4ன் கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கப் பிரிவு எடுக்கவுள்ளது.



comments | | Read More...

இசையமைப்பாளராகும் எஸ் ஜே சூர்யா!

 
 
 
இசையமைப்பாளர் அவதாரமெடுக்கும் இயக்குநர் பட்டியலில் இப்போதைய வரவு எஸ் ஜே சூர்யா.
 
தான் அடுத்து தயாரித்து, நடித்து இயக்கும் படத்துக்கு இவரே இசையமைக்கவும் செய்கிறார்.
 
ஆரம்பத்திலிருந்தே எஸ்ஜே சூர்யா படங்களின் வெற்றியில் இசைக்கு பிரதான பங்கிருக்கும். ஆரம்ப இரு படங்களுக்கு தேவாவும், அடுத்தடுத்த படங்களுக்கு ஏ ஆர் ரஹ்மானும் இசையமைத்தனர். கடைசியாக அவர் இயக்கிய புலி படத்துக்கும் ரஹ்மான்தான் இசை.
 
ஆனால் எஸ்ஜே சூர்யா தயாரித்து இயக்கி நடிக்கும் 'இசை'க்கு அவரே இசையமைக்கவும் செய்கிறார். இதுகுறித்து எஸ்ஜே சூர்யாவிடம் கேட்டபோது, "உண்மைதான். அந்தப் படத்துக்கு நானே இசையமைக்க முடிவு செய்துவிட்டேன். இசையில் எனக்கு உள்ள ஈடுபாட்டைப் பார்த்து, ஏற்கெனவே என்னை இசைமைக்கச் சொன்னார்கள். நான்தான் அப்போதெல்லாம் மறுத்து வந்தேன்," என்றார்.
 
'இசை' படத்துக்கு முதலில் ரஹ்மான்தான் இசையமைக்கவிருந்தாராம். ஆனால் அவருக்கு வேறு புராஜெக்டுகள் வரிசையாக வரவே, இந்தப் படத்துக்கு நீங்களே இசையமைக்கலாமே என எஸ்ஜே சூர்யாவிடம் சொன்னாராம்.


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger