News Update :
Powered by Blogger.

உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்க தடை: அமெரிக்க விமான நிலையத்தில் சீமான் தடுத்து நிறுத்தப்பட்டார்

Penulis : karthik on Saturday, 5 November 2011 | 02:01

Saturday, 5 November 2011

 
 
 
அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள் அமெரிக்காவில் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு சீமானுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதற்கான முறையான பயண அனுமதியும் அந்நாட்டு அரசிடமிருந்து பெற்று சீமானின் பயண ஏற்பாடுகளை உறுதி செய்தனர்.
 
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு சீமான் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சீமான் நியூயார்க் சென்று சேர்ந்தபோது, அவரை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி விமான நிலையத்திலேயே தடுத்து வைத்துள்ளனர்.
 
இதற்கான காரணம் கேட்டதற்கு, சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்றும், அவரை அனுமதித்தால் அது அமெரிக்க நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகலாம் என்ற அச்சம் காரணமாக அனுமதி மறுக்கப்படுவதாக கூறியுள்ளனர்.
 
சீமானுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோது இந்த உண்மைகள் அவர்களுக்கு தெரியாமல் போனது ஏன்? இதிலிருந்து தமிழினத்தின் நலனுக்கு எதிரான சக்திகள் அளித்த தகவல்கள் பேரிலேயே சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
 
இது அமெரிக்காவில் நடை முறையில் உள்ள மனித உரிமை, கருத்துச் சுதந்திர சட்ட உரிமைகளுக்கு முரணான நடவடிக்கையாகும். இந்நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக உண்மையாகப் போராடிவரும் அனைத்து தமிழர் தலைவர்களும் இப்படிப்பட்ட சட்ட அராஜகங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
 
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவராக உள்ள அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரை இதேபோல்தான் சென்னை விமான நிலையத்தில் இந்திய குடியேற்ற துறை விமானத்தில் வைத்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது. அதுதான் இன்றைக்கு சீமானுக்கும் நடந்துள்ளது.
 
தமிழீன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள பவுத்த இனவாத ஆட்சியின் அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று, தமிழினப் படுகொலைக்கு உதவிய அரசுகள், இன்று தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அரசியல் தளத்திலும் முடக்க இப்படிப்பட்ட வன்செயல்களில் ஈடுபடுகின்றன.
 
இன்றைக்கு சீமானுக்கு இழைக்கப்பட்ட அநீதி தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தமிழினத்தின் அரசியல் போராட்டம் ஒருபோதும் முடங்கிவிடாது. தமிழீழ விடுதலைக்காகப் போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் ஆத்ம பலத்தை சிந்தையில் ஏந்தி விடுதலைப் போராட்டம் வென்றே தீரும்.
 
இன்று இரவு ஒரு மணிக்கு சென்னை திரும்பும் சீமானை வரவேற்க நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் திரளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



comments | | Read More...

இலங்கையில் என் படத்தை வெளியிட மாட்டேன்! – இயக்குநர் சசிகுமார் அதிரடி

 
 

தமிழ்ப் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் தொடர்கிறது. அவர்கள் என்ன நமது படங்களுக்கு தடை விதிப்பது… இலங்கையில் எனது படத்தை திரையிட அனுமதி தரமாட்டேன். கோடம்பாக்கம் நினைத்தால் கொழும்பு வருமானத்துக்கே செக் வைக்க முடியும், என்றார் இயக்குநர் / தயாரிப்பாளர் சசிகுமார்.

சர்ச்சைக்குரிய தமிழ் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிக்கிறது. புதுப்படங்களை அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்களை நீக்குகிறது. இஷ்டம் போல் காட்சிகளை வெட்டித் தள்ளி அரை குறையாக தியேட்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தீபாவளிக்கு ரிலீசான 7ஆம் அறிவு படத்திலும் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்கள் நீக்கப்பட்டன. இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பத்திரிகைப் பேட்டியில், "தமிழனாகப் பிறந்த எல்லோருமே ஈழ உணர்வாளர்கள்தான். இதயத்தைப் பிளந்து காட்டித்தான் அதை வெளிப்படுத்த ணும்கிற அவசியம் இல்லை. சராசரி சசிகுமாரா அந்த துயரத்துக்காகத் துடிச்சிருக்கேன். கதறி இருக்கேன். உணர்வோ உதவியோ… என்னால முடிஞ்சதை எப்பவுமே செய்றவன் நான். அதை வெளியே காட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இப்பவும் 'போராளி' படத்துக்கான எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். ஒரு தயாரிப்பாளரா இந்த முடிவு என்னைப் பாதிக்கும்தான். ஆனால், கண்ணீரும் கதறுலுமா நம்ம சொந்தங்கள் அல்லாடித் தவிக்கிற அந்த மண்ணில் படம் ஓட்டிக்காட்ட நான் விரும்பலை.

முன்னாடிலாம் கிராமப்புறங்களில் வயதானவங்க இறந்துட்டா தூக்கம் விழிக்கணுங்கிறதுக்காக துக்க வீட்டில் சினிமா ஓட்டுவாங்க. உலகத்தையே உலுக்கிய துக்கத்துக்கும் நாம படம் ஓட்டிக்கிட்டு இருக்கிறது நியாயமா படலை.

அங்கே மிச்ச சொச்சமா இருக்கிற தமிழர்களும் படம் பார்க்கிற மனநிலையில் இல்லை. சுற்றுலாவும் சினிமாவும்தான் இலங்கையோட பொருளாதார ஆதாரம். தொப்புள்கொடி உறவுனு துடிக்கிற நாம் எதுக்காக இலங்கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை கொடுக்கணும்? எவ்வளவு லாபத்தை இழந்தாலும், இனி நான் எடுக்கப்போற எந்தப் படத்துக்குமே எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக் கப்போறது இல்லை.

தமிழ் உணர்வு களைத் தட்டி எழுப்புற மாதிரி ஒரு வசனம் வந்தால்கூட சம்பந்தப்பட்ட படத்தை இலங்கை அரசாங்கம் தடை பண்ணிடுது. சமீபத்தில்கூட இந்த மாதிரி கெடுபிடிகளை இலங்கை அரசு காட்டி இருக்கு. அவங்க என்ன நம்ம படங்களைத் தடை பண்றது?

கோடம்பாக்கம் மனசு வைத்தால் கொழும்புக்கே வருமானரீதியா செக் வைக்க முடியும். நமக்கும் இதில் இழப்பு இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது? உயிரையும் உயிரா நெனச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காக வருமானத்தை இழக்குறது தவறே இல்லை!" என்று கூறியுள்ளார்.

சசிகுமாரின் இந்த அதிரடி முடிவு தமிழ் உணர்வு கொண்ட பல தயாரிப்பாளர்களையும் யோசிக்க வைத்துள்ளது.

சசிகுமார் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், "இலங் கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை வழங்கலாமா, கூடாதா என்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்கு நர்கள் சங்கம் உள்ளிட்டவை கலந்து ஆலோசித்து இப்படி ஒரு திட்டத்தைச் சொன்னால், நிச்சயமாக அதனை ஏற்று நடப்பேன். தமிழர்களின் வலி அறிந்த ஒரு தயாரிப்பாளர்களில் ஒருவனாக சசியின் கருத்துக்குத் தலைவணங்குகிறேன். சினிமா வுக்கு வருமானம் அவசியம்தான் என்றாலும், அதைவிட, தமிழனின் தன்மானம் முக்கியமானது!" என்று கூறியுள்ளார்.

comments | | Read More...

சச்சினின் 100வது சதத்தை பார்க்க ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிப்பு

 
 

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை சச்சின் பூர்த்தி செய்வார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிரிக்கெட் உலகில் அதிக ரன்களை குவித்தவர், அதிக டெஸ்ட் சதங்கள், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் என்று இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 99வது சதத்தை அடித்த சச்சின் அடுத்து வரும் போட்டிகளில் 100வது சதமடிப்பார் என்று ரசிகர்கள் இடையே எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் அதன்பின் சச்சின் கலந்து கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை.

மொத்தம் கலந்து கொண்ட 12 போட்டிகளில் 431 ரன்களை மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக இந்திய அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற போது அந்த சாதனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் தொடர் தோல்விகளோடு நாடு திரும்பியது தான் மிச்சம்.

இந்தியாவுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது காயம் காரணமாக சச்சின் எந்த போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்தியா அணியின் சகவீரர்கள் கூட சோர்ந்து போய்விட்டனர்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவு அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ளது. இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள சச்சின் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வழக்கமான முகபாவனையில் அணியின் சகவீரர்களுடன் பேசி மகிழ்ந்தார். எந்த மன அழுத்தமுமின்றி காணப்பட்டார்.

மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் ஷிவ்நரேன் சந்தர்பால், டாரன் பிராவோ, பிஷூ உள்ளிட்ட வீரர்கள் களமிறங்க உள்ளது. இந்திய அணியின் சார்பாக காயம் காரணமாக ஓய்வில் இருந்த சச்சின் உடன், சேவாக், யுவராஜ் சிங் ஆகியோரும் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்களுடன் தற்போது பலமான நிலையில் உள்ள இந்திய அணியில் அனுபவ வீரர்களும் இணையும் பட்சத்தில் நாளைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவே இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger