News Update :
Home » » புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வேட்பாளர் இன்று அறிவிப்பு

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வேட்பாளர் இன்று அறிவிப்பு

Penulis : karthik on Monday 14 May 2012 | 02:33




புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்த� �் ஜூன் மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.
 
இந்த தேர்தலில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, ம.தி. மு.க. ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்து உள்ளன. ஆனால் தே.மு.தி .க. போட்டியிடப்படுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தொண்டர்களின் கருத்தை ஏற்று விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார்.
 
தே.மு.தி.க. சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். வேட்பாளர் பெயரை விஜயகாந்த் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது. தே.மு.தி.க. மாவட் செயலாளர் ஜாகீர் உசேன், அவைத் தலைவ� ��் சீனிவாசன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டும் தே.மு. தி.க.வை ஆதரிக்க போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஆனால் மற்ற கட்சிகள் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. தி.மு.க. தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை என் பதை தெரிவிக்க 49 (ஓ)வை பயன்படுத்த போவதாக முன்னாள் அமைச்ச� �் ரகுபதி கூறினார். இதற்கான அனுமதியை புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வினர் கட்சி தலைமையிடம் கேட்டுள்ளனர்.




Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger