News Update :
Home » » நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்

நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்

Penulis : karthik on Monday 26 March 2012 | 11:58

 
 
 
நாகர்கோவிலில் இருந்து சொத்தவிளை செல்லும் சாலையில் ஏராளமான முந்திரி தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் ஆள் இல்லாத நேரங்களில் சில இளம் ஜோடிகள் அத்துமீறி நுழைவதாகவும், அவர்கள் ஆபாச சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தது.
 
இது அப்பகுதி மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தோட்டங்கள் புகுந்து சில்மிஷத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து போலீசில் ஒப்படைக்க முடிவு செய்தனர். சம்பவத்தன்று இப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்கு ஆண்களும், பெண்களும் வேலைக்குச் சென்றனர். அப்போது தோப்பில் உள்ள ஒரு மரத்தில் பேண்ட் சட்டையும், சுடிதாரும் தொங்கியது.
 
இதைப்பார்த்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் நேராக ஊருக்குள் சென்று மக்களை திரட்டி வந்தனர். பின்னர் பொதுமக்கள் ஏராளமானோர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் அரைகுறை ஆடையுடன் நின்றனர். மக்களை பார்த்த வாலிபர்களும், இளம்பெண்களும் ஓட்டம் பிடித்தனர். எனினும் பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்தனர்.
 
அவர்களிடம் விசாரித்தபோது இளம்பெண்கள் இருவரும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும், வாலிபர்கள் இருவரும் அதே கல்லூரியில் படித்து வருவரும் தெரியவந்தது. இவர்கள் இதுபோல பலமுறை இங்கு வந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசில் ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு செய்தனர்.
 
அப்போது பிடிபட்ட 4 பேரும் ''நாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டோம், இனிமேல் இதுபோன்ற தவறை செய்யமாட்டோம்'' என கண்ணீர் விட்டனர். மேலும் போலீஸ் நிலையம் சென்றால் தங்கள் படிப்பு பாழாகி விடும் என கூறி கதறி அழுதனர். கடைசியில் அவர்களை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger