News Update :
Home » » நடிகை சுஹாசினியுடன்இயக்குனர் சேரன் மோதல்

நடிகை சுஹாசினியுடன்இயக்குனர் சேரன் மோதல்

Penulis : karthik on Saturday 7 January 2012 | 18:33

நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்கும் படம்
பனித்துளி. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம்
திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சுஹாசினி மணிரத்னம் , தயாரிப்பாளர் டி. சிவா , இயக்குனர்
சேரன் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் டி. சிவாபேசியதாவது ;-
'' சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடுவதற்கு தியேட்டர்கள் இல்லாததால் நிறைய
தயாரிப்பாளர்கள் நஷ்டத்திற்கு ஆளாகிறார்கள். ஆதலால் தயாரிப்பாளர்கள்
சங்கத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறோம்.
அதன்படி பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் இனிமேல் ஜனவரி 14 , ஏப்ரல் 14 ,
மே 1 , ஆகஸ்ட் 15 , தீபாவளி என வருடத்தில் இந்த ஐந்து நாட்களில் மட்டுமே
வெளியாக வேண்டும்.
மற்ற நாட்களில் குறைந்த பட்ஜெட் படங்களை வெளியிட்டுக் கொள்ள வழிவகை
செய்யப்பட்டுள்ளது '' என்றார்.
நடிகை சுஹாசினி பேசியதாவது:-
"நான் ஒரு நடிகையாகவோ , சினிமா சார்ந்தவராகவோ இல்லாமல் சாதரண பெண் ரசிகை
என்ற அளவில் ஒரு கோரிக்கையை இங்கே வைக்கிறேன். ஹீரோக்களில் எம்.ஜி.ஆர் ,
கமல் , அரவிந்த் சாமி , அஜித் போன்ற ஹேண்ட்சம் ஹீரோக்களை தமிழ்
ரசிகைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். நடிகைகளை மட்டும் அழகழகாக
அறிமுகப்படுத்துகிறீர்களே... ரசிகைகளுக்கும் அழகான ஹீரோக்களை
அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்" என்றார்.
இயக்குனர் சேரன் பேசியதாவது:-
'' சுஹாசினி பேசிய ஹேண்ட்சம் ஹீரோக்கள் எல்லோருமே வெள்ளை நிறமுடையவர்கள்
என்பதால் அப்படி சொல்லி இருக்கிறார். கறுப்பாக இருப்பவர்களிலும்
ஹேண்ட்சம் ஹீரோக்கள் இருக்கிறார்கள் மேடம். அவர்களையும் ரசியுங்கள் ''
என்றார்.
இருவருக்குமிடையேயான இந்த ' ஹேண்ட்சம் ' குறித்த மோதல் , எல்லோரிடமும்
புன்னகை கலந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்படின்னா இந்த அம்மணி மணிரத்தினத்தை (அதாங்க இவங்க புருஷன்) ரசிக்கிறதே
இலையோ ...!!
கொஞ்ச நாளாவே இந்த அம்மணி ஓவரா தான் போய்கிடு இருக்கு மணிரத்தினம் சார்
பார்த்துங்கோ.....
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger