News Update :
Home » » இனக்கலவரம் வெடித்தது: நைஜீரியாவில் எம்.பி. உள்பட 115 பேர் சுட்டுக்கொலை

இனக்கலவரம் வெடித்தது: நைஜீரியாவில் எம்.பி. உள்பட 115 பேர் சுட்டுக்கொலை

Penulis : karthik on Monday 9 July 2012 | 19:39


நைஜீரியாவில் பிளேச்சு மாநிலம் பர்கின் லாடி மாவட்டத்தில் பாரம்பரிய கிறிஸ்தவ பழங்குடியினருக்கும், இடம்பெயர்ந்து வந்த புலானி பழங்குடியினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
 
கடந்த சனிக்கிழமை, கிறிஸ்தவ பழங்குடியின கிராமங்களுக்குள் புகுந்து புலானி இனத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில், 63 பேர் பலியானார்கள். அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
 
அதில், ஆளும்கட்சி செனட் எம்.பி. கியாங் டான்டோங், மாநில எம்.எல்.ஏ. ஒருவர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, புலானி இன பழங்குடி மக்கள், மீண்டும் வந்து தாக்குதல் நடத்தினர். இதில், எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 52 பேர் பலியானார்கள்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger