News Update :
Home » » இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 10 பேரும் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 10 பேரும் விடுதலை

Penulis : karthik on Monday 9 July 2012 | 09:48


கடந்த சிலநாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து சென்ற மீனவர் செந்தூர்பாண்டி உள்பட 5 பேர் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அத்துமீறி எல்லை கடந்து வந்து மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்து மன்னார் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் கரை திரும்பாத செந்தூர்பாண்டி உள்பட 5 மீனவர்களை தேடி கார்டன் என்பவரின் தலைமையில் 5 பேர் கச்சத்தீவு பகுதிக்கு சென்றனர். அவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. 

இதற்கு எதிர்பபு தெரிவித்தும், கைது செய்யப்பட்ட 10 மீனவர்களை உடனே விடுதலை செய்யக்கோரியும் ராமேசுவரம் மீனவர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்தத� �திலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார். 

இதனையடுத்து மத்திய அரசு இதுதொடர்பாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பேரில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட செந்தூ� �்பாண்டி, கார்டன் உள்பட 10 மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலையான மீனவர்கள் நாளை ராமேசுவரம் திரும்புவார்கள் என்று தெரிகிறது.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger